search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுமான பணி
    X

    ஆய்வு செய்த காட்சி.

    ரூ.2 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுமான பணி

    • ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார்.
    • 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி 19-வது வார்டு பகுதியான மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார். பிறகு சர்ச் வீதியில் அடிப்படை வசதிகள் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த அவர் கூறுகையில், தாராபுரம் மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் தொடங்கப்பட்டு பணிகள் வெகு விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முழு முயற்சியுடன் செயல்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    அதே போன்று தாராபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.நாகராஜ், 19-வது வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல், நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாலு, நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×