search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலையாா் கோவில் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக்கூடாது - இந்து முன்னணி வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    அண்ணாமலையாா் கோவில் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக்கூடாது - இந்து முன்னணி வலியுறுத்தல்

    • திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது.
    • ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் கிழக்கு கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் ராஜகோபுரமாக உள்ள கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    அதேவேளையில், கூட்ட நெரிசலால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் கிழக்கு கோபுரத்தை தரிசனம் செய்கின்றனா்.இந்நிலையில், கோவிலின் கிழக்கு கோபுரத்தை 30 அடி உயரத்துக்கு மறைத்து வணிக வளாகம் கட்டினால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, பக்தா்களின் வசதிக்காகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×