search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.50 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டிட திறப்பு விழா
    X

    மதுரை செட்டிக்குளத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வணிக வளாக கட்டிடத்தை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.

    ரூ.50 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டிட திறப்பு விழா

    • செட்டிகுளத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.
    • புதிய கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

    மதுரை

    மதுரை அருகே செட்டிக்குளத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ரூர்பன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வணிகவளாக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.

    கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் சரவணன் முன்னிலைய வகித்தார். புதிய கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். ெதாடர்ந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்களை வழங்கினார். ரூ.14.59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையையும் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராகவன், மண்டலம் சசிகுமார், ஊராட்சி தலைவர் பூங்கோதை மலைவீரன், மகளிர் திட்ட அலுவலர் காளிதாஸ் கூட்டுறவு இணைப்பதிவாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×