search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா பூக்கள்"

    • காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
    • மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

    பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • டிசம்பா் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் இருக்கும்.
    • சுற்றுலாப் பயணிகள் ரோஜா மலா்களை வேதனையுடன் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் தென் மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யவில்லை. இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    அங்கு பொதுவாக நவம்பா் முதல் டிசம்பா் வரை பனி அதிகளவில் கொட்டித் தீா்க்கும். டிசம்பா் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் இருக்கும். ஆனால், வழக்கத் துக்கு மாறாக நடப்பு ஆண்டில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி பொழிவு தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

    இதனால் ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலா்கள் தற்போது அழுகிய நிலையில் காணப்படுகின்றன.

    எனவே ரோஜா பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அழுகி வதங்கிய நிலையில் நிற்கும் ரோஜா மலா்களை வேதனையுடன் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

    ×