search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் தாவரவியல் பூங்காவில் ரோஜா பூக்கள் அழுகும் அபாயம்
    X

    ஊட்டியில் தாவரவியல் பூங்காவில் ரோஜா பூக்கள் அழுகும் அபாயம்

    • டிசம்பா் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் இருக்கும்.
    • சுற்றுலாப் பயணிகள் ரோஜா மலா்களை வேதனையுடன் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் தென் மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யவில்லை. இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    அங்கு பொதுவாக நவம்பா் முதல் டிசம்பா் வரை பனி அதிகளவில் கொட்டித் தீா்க்கும். டிசம்பா் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் இருக்கும். ஆனால், வழக்கத் துக்கு மாறாக நடப்பு ஆண்டில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி பொழிவு தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

    இதனால் ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலா்கள் தற்போது அழுகிய நிலையில் காணப்படுகின்றன.

    எனவே ரோஜா பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அழுகி வதங்கிய நிலையில் நிற்கும் ரோஜா மலா்களை வேதனையுடன் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

    Next Story
    ×