search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெய்டு"

    • சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.
    • புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியிலுள்ள வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர் ஆகிய 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியிலுள்ள வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் பாபு, லஞ்சம் வாங்கியதாக கைதான நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம், நகை கைப்பற்றப்பட்டுள்ளது. #RTO #DVACRaid
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு என்பவர் வாகன தரச்சான்றிதல் வழங்க லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, செம்மண்டலத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. கையாள் எண்ண முடியாததால் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. ரூ.35 லட்சம் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
    ×