search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம், காரைக்காலில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
    X

    தமிழகம், காரைக்காலில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

    • சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.
    • புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியிலுள்ள வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர் ஆகிய 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியிலுள்ள வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×