search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிளுடன்"

    • ராமர் (வயது 28). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார்.
    • நள்ளிரவில் பஸ் நிலையப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குள், ராமர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 28). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார்.

    பின்னர், நள்ளிரவில் பஸ் நிலையப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குள், ராமர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென் றார் . அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீ சாரிடம் என் மோட்டார் சைக்கிளை பாதுகாக்காமல் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டபடி தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதை அடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி, வாகனத்திற்கான ஆவணங்களை எடுத்து வரு மாறு கூறி அனுப்பி வைத்தனர்.

    இதற்கு இடையே கலெக்டர் அலுவலகம் வந்த அவர், பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார், ராமரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை பள்ளப் பட்டி போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இந்த சம்பவம் நேற்று இரவு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.
    • இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு சம்பத் நகரில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு திருடி கொண்டு சென்று விட்டார்.

    மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனதை கண்ட உரிமையாளர் உடனடியாக இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மோட்டார்சைக்கிள் வாகன எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.

    அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை சவிதா சிக்னலில் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது ரோந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பவானி குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த சேட் (36) என்பதும் சம்பத் நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இவர் இதே போல் அம்மாபேட்டையில் ஒரு மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×