என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Teenager caught"
- ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு சம்பத் நகரில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு திருடி கொண்டு சென்று விட்டார்.
மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனதை கண்ட உரிமையாளர் உடனடியாக இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மோட்டார்சைக்கிள் வாகன எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.
அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை சவிதா சிக்னலில் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது ரோந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பவானி குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த சேட் (36) என்பதும் சம்பத் நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.
இவர் இதே போல் அம்மாபேட்டையில் ஒரு மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்