search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் மகேஷ்"

    • ஏற்கனவே கலைவாணர் கலையரங்கம் இருந்த இடத்தில் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
    • 95 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுமான பணி ஏற்கனவே கலைவாணர் கலையரங்கம் இருந்த இடத்தில் நடைபெற்று வருகிறது. ரூ.11 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.சுமார் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    இந்த நிலையில் புதிய கட்டிட பணிகளை மேயர் மகேஷ் அவ்வப்போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.நேற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அந்த பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பொறியாளர் பால சுப்பிரமணியம், மண்டலத் தலைவர் அகஸ்டினா கோகிலாவாணி, ஒன்றிய செயலாளர் மதியழகன், தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் வேல்முருகன், சுரேஷ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஆவணி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
    • ஆய்வின் போது கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளில் வழிபாடு செய்தால் திருமணங்கள் கைகூடும், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    குமரி மாவட்டம் மட்டு மின்றி பிற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மேற் கொண்டுள்ளது. கோவிலில் பந்தல் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை இன்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற் கொண்டார். பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப் படை வசதிகள் குறித்து அவர் பார்வையிட்டார். கோவிலில் உள்ள கழிவ றையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை சுத்தமாக வைத்துக்கொள்ள கோவில் ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் அந்த பகுதியில் கிடந்த மணலை அகற்றவும் உத்தரவிட்டார். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள முட்புதர்களை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.ஆய்வின் போது கோவில் மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • மேயர் மகேஷ் அறிவிப்பு
    • சுப. வீரபாண்டியன் பேசுகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பென்னப்ப நாடார் திடலில் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் எனது(மகேஷ்) தலைமையில் நடைபெறும்.

    இதில் சிறப்பு பேச்சாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளும்,அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

    • கட்டிட அளவீடு பணிகளுக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்
    • மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் இன்று கூட்டரங்கில் நடந்தது. மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், நகர் நல அதிகாரி டாக்டர் விஜய் சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மண்டல தலைவர்கள் செல்வக்குமார், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், ஜவகர் கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, டி.ஆர். செல்வம், உதயகுமார், சேகர், அக் ஷயா கண்ணன், ரமேஷ், நவீன் குமார், அய்யப்பன், அனுஷா பிரைட், பால் அகியா கோபால் சுப்பிரமணியன், அனிலா சுகுமாறன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறிய தாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் பிளாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வீடுகளுக்கு வரி நிர்ணயம் செய்ய வீடுகளை தனித்தனியாக அளவீடு செய்து வரு கிறார்கள். வீடுகளை அளவீடு செய்யாமல் தற்போது உள்ளது போல் வரிகளை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடைபெறவில்லை. 4 மாதங்கள் ஆகியும் வார்டுக்கு ஒரு ரூபாய் வரை வேலை செய்யவில்லையே என்று பொதுமக்கள் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள். உடனடியாக பணிகளை செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி வழங்கி வருகிறார்கள். உடனடியாக மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடை களுக்கு லைசன்ஸ் வழங்கு வதில் தற்காலிக ஊழியர்கள் பண வசூல் செய்கிறார்கள் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோட்டார், வடசேரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும். மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் பகுதியில் ரியல் எஸ்டேட்டுக்கு மாநகராட்சி மூலமாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற்ற பிறகே மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். பிளாட்டுகள் அமைப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தற்போது நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    2008-ம்ஆண்டு அதாவது கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதி எந்த மண்டலமாக இருந்ததோ அதே மண்டலமாக தான் தற்போது செயல்படும். மண்டலங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் தான் வரி விதிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 600 சதுரஅடி உள்ள வீடுகளுக்கு 25சதவீதமும் 601 முதல் 1200 சதுர அடி உள்ள வீடுகளுக்கு 50 சதவீதமும் 1201 முதல் 1800 சதுரடி உள்ள வீடுகளுக்கு 75 சதவீதமும் 1801-க்கு மேல் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஆளூர் பேரூராட்சி தற்போது டி மண்டலத்தில் தான் உள்ளது. பொதுமக்கள் மீது வரியை திணிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்பொழுது மாநகர பகுதியில் அரசின் விதி முறைக்கு உட்பட்டு தான் கட்டிடங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்கனவே அனுமதி பெற்ற அளவை விட கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளில் ஆஸ்பத்திரிகளில் பள்ளி கள் கல்லூரிகளில் கூடு தலாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. எனவேதான் அளவீடு செய்து அதற்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இதன் மூலமாக மாநக ராட்சிக்கு வருமானமும் அதிகரிக்கும். வீடுகள் மற்றும் கட்டடங்களை அளவீடு செய்வதற்கு கவுன்சிலர் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். பாரபட்சமின்றி இதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரில் தெரு விளக்குகளை சரி செய்யப்படவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டிய அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை மேற்கொண்டு தற்போது புதிதாக ஒப்பந்தகாரர் மூலமாக தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு வரு கிறது. இதுவரை 90 சதவீத தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள தெருவிளக்குகள் விரைவில் சீரமைக்கப்படும்.

    மாநகராட்சி கவுன்சிலர் களின் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் பிறந்த குழந்தைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மீது உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர் அனை வருக்கும் ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபடும் போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.ஏற்கனவே கடந்த கூட்டத்தில் கவுன்சிலர் விஜிலா ஜஸ்டிஸ் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும் என்று தெரி வித்திருந்தார்.

    ஆனால் இதுவரை மாற்றவில்லை என்று இன்றும் புகார் கூறியுள்ளார். குடிநீர் தொட்டியை மாற்ற நட வடிக்கை எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பணிகள் முடிக்கப்பட்ட காண்ட்ராக்ட்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்று என்னிடமே புகார் கொடுத்துள்ளனர்.

    ரூ.10 கோடி கொடுக்க வேண்டியுள்ளது. முன்னு ரிமை அடிப்படையில் பணம் வந்தவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2 இடங்களில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அந்த பணி கிடப்பில் உள்ளது.மேலும் ரெயில்வே ரோட்டில் செல்லும் சாலையின் ஒரு பகுதி ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது மற்றொரு பகுதி மாநகராட்சிக்கு சொந்தமானது ஆகும்.

    ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான ரோட்டை மாநகராட்சிக்கு இடம் பெறுவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சவேரியார் ஆலயத்தில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலைரூ. 20லட்சத்து 60ஆயிரம் செலவில் சீரமைக்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் உடைந்து கிடக்கும் குழாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.
    • பணியை துரித மாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில், ஜூன்.17-

    முக்கடல் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு நாக ர்கோவில் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகிறது.

    அணையில் நீர் மட்டம் குறைவாக இருந்த போதிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ள்ளனர்.

    இந்த நிலையில் துவர ங்காடு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்புஏற்பட்டு தண்ணீர் அந்த பகுதியில் வீணாக செல்கிறது.இது தொடர்பாக மாநக ராட்சி மேயர்மகேஷ் மற்றும் அதி காரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் உடைந்து கிடக்கும் குழாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.

    பணியை துரித மாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    முக்கடல் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவி லுக்கு வரும் பைப்லைனில் துவரங்காடு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்த பணியை மேற்கொண்டு நாளைக்குள் சிரமைப்பு பணியை முடிக்க அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளேன்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ப்படும். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் இருந்து நாராயணகுரு மண்டபம் வரை உள்ள சாலையை ரூ.20 லட்சம் செலவில் சீரமைக்க டெண்டர் விட ப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும்.

    கோட்டார் சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
    • அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை யில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அருகில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அணையில் போது மான அளவு தண்ணீர் இல்லாததால் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புத்தன்அணையில் இருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு மேற்கொள்ள ப்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணி குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி மற்றும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டு அந்த பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ 250 கோடி செலவில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த திட்டத்திற்கு மேலும்ரூ 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுரூ 296 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது பொது மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும்.

    எனவே இந்த பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு நாகர்கோவில் நகர மக்க ளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அழிவின்போது மண்டல தலைவர் ஜவஹர் திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×