search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கடல்"

    • சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது.

    நாகர்கோவில் : சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி சப்பாத்து பகுதியில் கடலில் நீராடும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து விஜய்வசந்த் எம்.பி., தேவஸ்தான அதிகாரி, சுற்றுலா துறை அதிகாரி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் விஜய்வசந்த் எம்.பி. கூறியதாவது:-சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு 3 கடல்கள் சங்கமம் ஆகும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதி மக்கள் கடலில் புனித நீராடும் பகுதி, கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது. கடல் அலை கரையில் எவ்வளவு தூரம் அலை கூட்டங்கள் வந்தாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. மத்திய அரசின் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தில், மத்திய அதிகாரிகள் உருவாக்கிய திட்டத்தின்படி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மணல் பாங்கான பகுதியில் மக்கள் புனித நீராடிய பகுதியில் மண்பரப்பு பகுதியில் கருங்கல்லால் சப்பாத்து போன்ற பகுதியை உருவாக்கினார்கள். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்றது.

    கடல் மணல் பரப்பில் கல்லால் சப்பாத்து அமைக்கும் பணிக்கு, அன்றைய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பணம் ஒதுக்கப்பட்டது. மணல் பரப்பில் சப்பாத்து அமைத்தால், எப்போதும் அலை அடித்துக்கொண்டி ருக்கும் பகுதியில் பாசி படியும், இதனால் கடலில் நீராடுபவர்கள் "கால்" வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை மத்திய அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அதனை அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கொரோனா காலத்தில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டது.முக்கடல் சங்கமம் கடல் பரப்பில் சப்பாத்து பகுதியில் நீராடிய பலரும் கால் வழுக்கி சப்பாத்து பகுதியிலே கீழே விழுந்ததில் பலருக்கும் தலையில் அடிபட்டு உள்ளது. காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்வதும். பின்னர் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதும் ஒரு தொடர் கதையாக நடந்து வருகிறது.2 வட மாநிலத்தவர் சப்பாத்து பகுதியில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலமான காயம் ஏற்பட்டு பலியாகினர்.

    இந்நிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் அதிகமாக வரும் கால கட்டத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்களும் கடலில் புனித நீராடும் நிலையில் அய்யப்ப பக்தர்கள் மட்டும் அல்லாது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.மேலும் படித்துறையில் பாசி படிந்துள்ள பகுதியை முழுவதுமாக அகற்றி விட்டு மண் பரப்பு பகுதியை மீண்டும் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • மாம்பழத்துறையாறு அணை ஒரே நாளில் 13½ அடி உயர்ந்தது
    • மயிலாடியில் 110.2 மில்லி மீட்டர் மழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இடைவிடாது மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. மாலையில் சற்று மழை குறைந்து இருந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பள்ளி களுக்கு இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள் ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மயிலாடி பகுதியில் நேற்று விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு அதிகபட்சமாக 110.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறை யாறு, திற்பரப்பு, கோழி போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1¼ அடியும் பெருஞ்சாணி அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக மழை பெய்த பிறகும் உயராத நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 13½ அடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் நாகர் கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்ட மும் உயரத் தொடங்கி யுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 5½ அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு அணை நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப் பட்டுள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது. அணைக்கு 1546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.2, பெருஞ்சாணி 67.8, சிற்றாறு 1-42, சிற்றாறு 2-46.4, பூதப்பாண்டி 31.4, களியல் 79, கன்னிமார் 20.2, கொட்டாரம் 62, குழித்துறை 97.2, மயிலாடி 110.2, நாகர்கோவில் 72.2, புத்தன்அணை 63.2, சுருளோடு 56.4, தக்கலை 59.8, குளச்சல் 26.4, இரணியல் 18.2, பாலமோர் 62.6, மாம்பழத்துறையாறு 93.8, திற்பரப்பு 26.6, ஆரல்வாய்மொழி 10.4, கோழிப்போர்விளை 84.5, அடையாமடை 52.3, குருந்தன்கோடு 28, முள்ளங்கினாவிளை 57.8, ஆணைக்கிடங்கு 94, முக்கடல் 26.

    • கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் தொடங்கி வைத்தார்
    • முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    ஆனிமாத பவுர்ணமி யையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது.

    கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில்இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில்உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். அங்கு பூஜை நடந்தது.

    அதையடுத்து சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். தொடர்ந்து வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்.

    கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீ சூரிய குரு மகாராஜ் மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி குகநாதீஸ் வரர் கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர் சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை த்தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் உடைந்து கிடக்கும் குழாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.
    • பணியை துரித மாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில், ஜூன்.17-

    முக்கடல் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு நாக ர்கோவில் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகிறது.

    அணையில் நீர் மட்டம் குறைவாக இருந்த போதிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ள்ளனர்.

    இந்த நிலையில் துவர ங்காடு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்புஏற்பட்டு தண்ணீர் அந்த பகுதியில் வீணாக செல்கிறது.இது தொடர்பாக மாநக ராட்சி மேயர்மகேஷ் மற்றும் அதி காரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் உடைந்து கிடக்கும் குழாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.

    பணியை துரித மாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    முக்கடல் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவி லுக்கு வரும் பைப்லைனில் துவரங்காடு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்த பணியை மேற்கொண்டு நாளைக்குள் சிரமைப்பு பணியை முடிக்க அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளேன்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ப்படும். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் இருந்து நாராயணகுரு மண்டபம் வரை உள்ள சாலையை ரூ.20 லட்சம் செலவில் சீரமைக்க டெண்டர் விட ப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும்.

    கோட்டார் சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×