search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியானது
    X

    முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியானது

    • மாம்பழத்துறையாறு அணை ஒரே நாளில் 13½ அடி உயர்ந்தது
    • மயிலாடியில் 110.2 மில்லி மீட்டர் மழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இடைவிடாது மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. மாலையில் சற்று மழை குறைந்து இருந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பள்ளி களுக்கு இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள் ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மயிலாடி பகுதியில் நேற்று விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு அதிகபட்சமாக 110.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறை யாறு, திற்பரப்பு, கோழி போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1¼ அடியும் பெருஞ்சாணி அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக மழை பெய்த பிறகும் உயராத நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 13½ அடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் நாகர் கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்ட மும் உயரத் தொடங்கி யுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 5½ அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு அணை நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப் பட்டுள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது. அணைக்கு 1546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.2, பெருஞ்சாணி 67.8, சிற்றாறு 1-42, சிற்றாறு 2-46.4, பூதப்பாண்டி 31.4, களியல் 79, கன்னிமார் 20.2, கொட்டாரம் 62, குழித்துறை 97.2, மயிலாடி 110.2, நாகர்கோவில் 72.2, புத்தன்அணை 63.2, சுருளோடு 56.4, தக்கலை 59.8, குளச்சல் 26.4, இரணியல் 18.2, பாலமோர் 62.6, மாம்பழத்துறையாறு 93.8, திற்பரப்பு 26.6, ஆரல்வாய்மொழி 10.4, கோழிப்போர்விளை 84.5, அடையாமடை 52.3, குருந்தன்கோடு 28, முள்ளங்கினாவிளை 57.8, ஆணைக்கிடங்கு 94, முக்கடல் 26.

    Next Story
    ×