search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தன் அணை குடிநீர் திட்டம் 2 மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் : மேயர் மகேஷ் தகவல்
    X

    புத்தன் அணை குடிநீர் திட்டம் 2 மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் : மேயர் மகேஷ் தகவல்

    • நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
    • அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை யில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அருகில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அணையில் போது மான அளவு தண்ணீர் இல்லாததால் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புத்தன்அணையில் இருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு மேற்கொள்ள ப்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணி குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி மற்றும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டு அந்த பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ 250 கோடி செலவில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த திட்டத்திற்கு மேலும்ரூ 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுரூ 296 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது பொது மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும்.

    எனவே இந்த பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு நாகர்கோவில் நகர மக்க ளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அழிவின்போது மண்டல தலைவர் ஜவஹர் திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×