search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்சந்தை"

    • ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.
    • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன் மார்க்கெட் அருகே ஓடை செல்கிறது.

    அதன் அருகே இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த கரையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு ஓடை பகுதியில் ஒரு சிலர் மது அருந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதேபோல் இடது கை மற்றும் இடது கண்ணிலும் ரத்த காயங்கள் இருந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.

    இதில் மது அருந்தும் போது அவர்களுக்குள் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.

    இந்நிலையில் இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அசைவம் சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தை பெரும்பாலான இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
    • ஆவணி மாதம் முடிவடைவதால் இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோவிலுக்கு செல்வார்கள். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை பெரும்பாலான இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

    புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வர்.இதனால் புரட்டாசி மாதத்தில் வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள்.

    இந்நிலையில் இன்றுடன் ஆவணி மாதம் முடிவடைவதால் இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தஞ்சை மீன்சந்தையில் இன்று காலை முதலே மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். சில வகை மீன்களின் விலை உயர்ந்தாலும் அவற்றின் விற்பனை பாதிக்கபடவில்லை.

    இதேப்போல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றனர். பல கடைகளில் மக்கள் வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.

    ×