search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீது வழக்கு"

    • தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
    • இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, செலவடை, வென்னானப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல், பாப்பாத்தியின் மகன் தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார். இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தாமரைச்செல்வன் மற்றும் திருமணம் செய்து வைத்த பெரியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
    • சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது.

    சேலம்:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஏ.டி.ஜி.பி. மாற்றப் பட்டதை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

    அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது. இதில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி யது உட்பட பல்வேறு விதி மீறல் தொடர்பாக 8 ஆயி ரத்து 971 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. போதையில் வாக னம் ஓட்டிய 213 பேரிடம் வாக னம் பறிமுதல் செய்து அப ராதம் விதித்தனர். மாநகரில் உள்ள 824 ரவுடிகளில் 424 பேரை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    • சேவல் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர்களிடம் இருந்து ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.

    சென்னிமலை 

    சென்னிமலை அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அய்யம்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 பேர் பணம் மற்றும் சேவல் வைத்து கொண்டு சண்டை நடத்தி கொண்டு இருந்தனர்.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் அவர்கள் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு பதியப்பட்டது
    • கடனை திருப்பி கேட்டதால் சம்பவம்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள கே ராசியமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 43 ) இவர் அதே கிராமத்தை சேர்ந்த ரோஸ்மேரி என்பவருக்கு ரூ 50.ஆயிரம் கட னாக கொடுத்துள்ளார். பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பி தராததால், ஆரோக்கியமேரி அவரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆரோக்கியமேரியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆரோக்கியமேரி வடகாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரா ஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டையில் ரூ. 22 லட்சம் கடனுக்கு ரூ.52 லட்சம் கேட்டவர் மீது போலீசார் வழக்கு பதிந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 48). இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார் .

    இவர் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் ( 50) என்பவரிடம் ரூ. 22 லட்ச ரூபாயை 2018-ம் ஆண்டு கடனாகப பெற்றார். அப்போது ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திட்டும், மேலும் அவருக்கு சொந்தமாக உள்ள 2,000 சதுர அடி நிலத்தை அடமானமாக வழங்கியுள்ளார்.

    மாதம்தோறும் மணிவண்ணன் வங்கி கணக்கில் வட்டியை செலுத்தி வந்தார். ஆனால் வருமான வரி பிரச்சனை வரும் என்பதால் ரொக்கமாக தரும்படி மணிவண்ணன் கேட்டுள்ளார். அதன்படி 14 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளார்.

    இதையடுத்து தான் ஏற்கனவே வழங்கிய ஆவணங்களை கேட்டபோது கூடுதலாக 52 லட்சம் ரூபாய் தந்தால் மட்டுமே வழங்க முடியும், அத்துடன் ஜாமீனாக வழங்கிய அடமான நிலத்தையும் தர இயலாது என மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்தை அதிகரிக்கும் நோக்கில் சுத்தம் செய்து வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த 4-ம் தேதி ஸ்ரீதரன் அம்மா பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதனை விசாரித்த போலீசார், மணிவண்ணன் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×