சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார்.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, செலவடை, வென்னானப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல், பாப்பாத்தியின் மகன் தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார். இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தாமரைச்செல்வன் மற்றும் திருமணம் செய்து வைத்த பெரியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com