search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் வாரிய ஊழியர்"

    • மின்வாரிய பணியாளரான ஜெயபாரதி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
    • அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவிநாசி:

    சேவூா் போலீசார் அவிநாசி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த இரு நபா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

    விசாரணையில் அவா்கள், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை சோ்ந்த செல்வம் மகன் வினோத்குமாா் (வயது 29), தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் அருள்ராஜ் (27) என்பது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளிகளான இவா்கள் தனது நண்பருடன் சோ்ந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு சேவூா் அருகே அ. குரும்பபாளையம் கிரீன் காா்டன் பகுதியில் வசித்து வரும் மின்வாரிய பணியாளரான ஜெயபாரதி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதில்நாகப்பட்டினம் மாவட்டம், வழுவாகுடியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் பிரகாஷுக்கும் (39) தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

    • அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் செய்வேன் என்றும் எச்சரித்தார்.
    • வீட்டில் இருந்த பெண் ஆய்வு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அங்கு சென்ற ஊழியர் தெரிவித்துள்ளார்.

    தக்கலை:

    தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் வீட்டுக்கு நேற்று டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் சென்றார்.

    வீட்டில் அவரது மனைவி மட்டுமே இருந்தார். அவர் அந்த வாலிபரிடம் யார் நீங்கள்? எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நபர் மின் வாரிய ஊழியர் என்றும் வீட்டின் மின் மீட்டரை சோதனையிட வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    அவரிடம் தொழிலாளியின் மனைவி அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டார். ஆனால் அவரோ முறையாக அடையாள அட்டையை காண்பிக்காததால் சந்தேகமடைந்த தொழிலாளியின் மனைவி வாக்குவாதம் செய்தார்.

    மேலும் இதுகுறித்து அவர் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதோடு வீட்டுக்கு வந்த வாலிபர் வெளியே தப்பி செல்லாதவாறு வீட்டின் கேட்டையும் பூட்டி அந்த வாலிபரை சிறைபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் அங்கிருந்தபடியே சிலருக்கு போன் செய்து அவர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தார்.

    மேலும் தொழிலாளியின் மனைவியையும் மிரட்டினார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் செய்வேன் என்றும் எச்சரித்தார். ஆனால் வாலிபரின் மிரட்டலுக்கு பயப்படாத பெண் தன் கணவர் வந்த பின்பு இதுபற்றி பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

    இந்த நிலையில் அந்த வாலிபரின் அழைப்பின் பேரில் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் தொழிலாளியின் மனைவியிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் வீட்டுக்குள் சிறைபிடிக்கப்பட்ட நபரை மீட்டு செல்லவும் முயன்றனர். ஆனால் அந்த பெண், சிறைபிடித்த நபரை வெளியே விடமாட்டேன் என்று கூறியபடி கேட்டை இழுத்து மூடி விட்டார்.

    இதனால் அரண்டு போன நபர், வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதற்கிடையே பெண்ணின் கணவர் அங்கு வந்தார். அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் இருந்த பதிவுகளை பார்வையிட்டார்.

    மேலும் அந்த காட்சியில் இருந்த நபர் குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். இதில் தொழிலாளியின் வீட்டுக்கு வந்தது மின் வாரிய ஊழியர்தான் என்பது தெரிந்தது. மின் வாரிய ஊழியர் என்றால், அவர் அடையாள அட்டையை காட்டாமல் வாக்குவாதம் செய்தது ஏன்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து இரவிபுதூர்கடை மின் வாரிய அலுவலக இளநிலை பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த வீட்டில் காடை கோழிகள் வளர்ப்பதாகவும் அதற்காக தனி மின் இணைப்பு பெற்றுள்ளார்களா? என ஆய்வு செய்ய சென்றதாகவும் தெரிவித்தார். ஆனால் வீட்டில் இருந்த பெண் ஆய்வு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அங்கு சென்ற ஊழியர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி மின் வாரிய ஊழியர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 21-ந் தேதி பணிக்கு சென்ற மின்ஊழியர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
    • அந்தோணி ராஜை பழி தீர்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

    நாசரேத்:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஆனந்த பாண்டி (வயது 51). இவர் நாசரேத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 21-ந் தேதி பணிக்கு சென்ற இவர் மறுநாள் அலுவலக வளாகத்திற்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    மின் வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆனந்த பாண்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் நாசரேத் அருகே உள்ள குப்பாபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்ற வாலிபர் சிக்கினார். இவரது தந்தை அதே மின் வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத்தில் அடிபட்டு இறந்துள்ளார்.

    இதற்கு ஆனந்த பாண்டி தான் காரணம் என அந்தோணி ராஜ் கருதி உள்ளார்.

    இந்த ஆத்திரத்தில் அவர் அந்தோணி ராஜை பழி தீர்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அந்தோணி ராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் மூக்குப்பீறி பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×