search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிட்செல் மார்ஷ்"

    • பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்
    • உலகக் கோப்பையில் 225 அடித்ததுடன், இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம் பிடித்துள்ளார். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். 6 போட்டிகளில் 225 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 121 ரன்கள் அடித்தார். இலங்கைக்கு எதிராக அரைசதம் விளாசினார்.

    டிராவிஸ் ஹெட் அணிக்கு திரும்பியதும் மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் அவசரமாக சொந்த நாடு திரும்ப இருக்கிறார். இதனால் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகும். ஆஸ்திரேலியா வருகிற 4-ந்தேதி இங்கிலாந்தையும், 11-ந்தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது.

    மிட்செல் மார்ஷ் சொந்த காரணத்திற்கான அணியிலிருந்து விலகியுள்ளார். அவர் மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    • ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும்.
    • இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    டெல்லி:

    இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்திலும், இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா ஆல்-அவுட் செய்து வீழ்த்தும் என ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக இருக்கும். இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும். ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும். இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போதைய ஐபிஎல் தொடரில் மிட்செல் மார்ஷ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
    • முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3-வது போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசனுக்கான போட்டியில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டியில் விளையாடி மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

    முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3-வது போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரோவ்மன் பவல் அணியில் இடம் பெற்றார்.

    கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், மிட்செல் மார்ஷ் தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இந்த புகைப்படங்களை மிட்செல் மார்ஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு என் வாழ்வின் சிறந்த நாள் என தலைபிட்டிருந்தார்.

    • இதை விட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை.
    • விராட் கோலி உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இது குறித்து மெல்போர்னில் பேசிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாவது: மெல்போர்னில் இதைவிட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை .இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாத நம்ப முடியாத ஒரு ஆட்டமாக அது இருந்தது. என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 


    இதற்கு பிறகு உலககோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தை அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது அவரது ஆட்டம் ஆச்சரியமாக இருக்கிறது.12 மாதங்கள் அவர் அலட்சியமாக இருந்துள்ளார். உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார், இது பார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மிட்செல் மார்ஷ்-க்கு பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    • கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது.

    ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், கணுக்காலில் ஏற்பட்ட வலி காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    அடுத்த மாதம் இந்திய அணிக்கு எதிரான டி20 சுற்றுப்பயணத்தில் மிட்செல் மார்ஷ் கலந்து கொள்வார். அதனை தொடர்ந்து வரும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது. இந்த வெற்றிக்கு 30 வயதான அவர் முக்கிய பங்காற்றினார். மேலும் இந்த ஆண்டு அவருக்காக பெரிய திட்டங்கள் உள்ளன. எனவே அவரை சரி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி புதன்கிழமை நாளை நடைபெறவுள்ளது.

    • டெல்லி தகுதி பெறாதது குறித்து அந்த அணியில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • மும்பை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது.

    கொழும்பு:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்த அணி 14 புள்ளிகள் எடுத்து 5-வது இடத்தை பிடித்தது.

    மும்பை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் தோற்று டெல்லி வெளியேறியது.

    இந்த நிலையில் டெல்லி தகுதி பெறாதது குறித்து அந்த அணியில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் (டெல்லி அணி) ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது அவமான கரமானது. இது வேதனை அளித்தது. ஐ.பி.எல். போட்டி தொடக்கத்தில் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது. பிறகு ஒரு போட்டியில் விளை யாடினேன்.

    அப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சற்று நடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மீண்டும் போட்டிகளில் விளை யாடியது மகிழ்ச்சியாக இருந்தது.

    நான் 3-வது வரிசையில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். அதை 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது சிறந்த நிலைப்பாடு என்று நான் நிச்சயமாக உணர்கிறேன். மேலும் பவர்பிளேவில் பேட்டிங் செய்வதை விரும்பினேன். என்னால் 3-வது வரிசை யில் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்புகிறேன்.

    சர்வதேச கிரிக்கெட் மிகவும் கடினமானது. உலகில் எந்த அணிக்கு எதிராக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×