search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிட்செல் மார்ஷ்"

    • மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
    • கடந்த முறையில் இதுபோன்று தொடரின் பாதிலேயே வெளியேறினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றிருந்தார். காயம் காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். சுமார் 10 நாட்கள் கழித்து காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மிட்செல் மார்ஷ்க்குப் பதிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குல்பதீன் நயிப்பை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவருடைய அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதன்காரணமாக முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் களம் காண்கிறார் குல்பதீன் நயிப்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ரஷித் கான், நூர் முகமது, ஓமர்ஜாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது அவர்கள் வரிசையில் குல்பதீன் நயிப்பும் இணைந்துள்ளார்.

    இந்த சீசனில் மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரு விக்கெட் மட்டும் எடுத்துள்ளார். கடந்த வருடமும் போட்டியில் மத்தியில் இருந்து விலகினார். தற்போது இந்த சீசனிலும் போட்டியின் மத்தியில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணி இவரை 6.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • மார்ஷ் 20, 23, 18, 0 என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மதியம் 3.30 தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். இந்த டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மிட்செல் மார்ஷ் பஞ்சாப் அணிக்கெதிராக 12 பந்தில் 20 ரன்னும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 12 பந்தில் 23 ரன்களும், சிஎஸ்கே-வுக்கு எதிராக 12 பந்தில் 18 ரன்களும் அடித்துள்ளார். கொல்கத்தாவிற்கு எதிராக டக்அவுட் ஆனார். இதுவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.

    • கடந்த 12 மாதங்களாக இடைக்கால கேப்டனாக அணியை வழி நடத்திச் செல்கிறார்.
    • தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தொடர்களை வென்றுள்ளார்.

    ஆஸ்திரேலியா டி20 அணியின் கேப்டனாக இருந்த ஆரோன் பிஞ்ச் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், மிட்செல் மார்ஷ் இடைக்கால கேப்டனாக பணியாற்றி வந்தார்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருந்து வருகிறார். இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றிருந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்திருந்தது. இந்த சீசனில் இந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தது.

    இதனால் பேட் கம்மின்ஸிடம் கேப்டன் பதவியை வழங்க ஆஸ்திரேலியா தயாராக இருந்தது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய பிறகு, டி20 போட்டியை கேப்டன் பதவி என்ற சுமை இல்லாமல் மகிழ்ச்சியாக விளையாட இருப்பதாக தெரிவித்தார். இதனால் கேப்டன் பதவி மேல் அவருக்கு ஆர்வம் இல்லை எனத் தெரியவந்தது.

    இதனால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷிடம் கேப்டன் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    கடந்த 12 மாதங்களில் மிட்செல் மார்ஷ் தலைமையில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இனிமேல் உலகக்கோப்பை வரை ஆஸ்திரேலியாவுக்கு டி20 தொடர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன்ட்ரூ மெக்டொனால்டு "ஆஸ்திரேலியாவின் டி20 அணியை வழிநடத்திச் செல்லும் மிட்செல் மார்ஷின் திறன் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அணியை வழி நடத்திச் செல்ல அனைத்தும் தயாராக இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் மட்டும் நாங்கள் சரி எனச் சொல்ல வேண்டியுள்ளது" என்றார்.

    டி20 உலகக் கோப்பைக்காக தலைமை சேர்னேம் ஜார்ஜ் பெய்லி மற்றும் டோனி டோட்மெய்டு ஆகியோருடன் இணைந்து தேர்வுகுழு அமைக்க இருப்பதாக தெரிவிதுள்ளார்.

    • மிட்செல் மார்ஷ் 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • அலேக்ஸ் கேரி 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து ஹேசில்வுட்டின் (5 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.

    நியூசிலாந்தும் முதல் இன்னிங்சில் பதிலடி கொடுத்தது. மாட் ஹென்றி ஏழு விக்கெட் சாய்க்க ஆஸ்திரேலியா 256 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் (73), கேன் வில்லியம்சன் (51), ரச்சின் ரவீந்திரா (82), டேரில் மிட்செல் (58), ஸ்காட் குகெலின் (44) ஆகியோரின் ஆட்டத்தால் 372 ரன்கள் குவித்தது.

    முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்னதங்கியதால் ஆஸ்திரேலியா அணிக்கு 279 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஸ்மித் (9), லபுசேன் (6), கவாஜா (11), கேமரூன் க்ரீன் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 34 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    5-வது விக்கெட்டுக்கு டிராவிட் ஹெட் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிட் ஹெட் 17 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டிராவிஸ் ஹெட் மேலும் ஒரு ரன் சேர்த்த 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் அலேக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் பாய்ச்சி நின்றது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் அரைசதம் கடந்து விளையாடினர். இதனால் ஆஸ்திரேலியா வெற்றி நோக்கி பயணம் செய்தது.

    அணியின் ஸ்கோர் 220 ரன்னதாக இருக்கும்போது மிட்செல் மார்ஷ் 80 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஸ்டார்க் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

    8-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 44 பந்தில் 32 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 65 ஓவரில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலேக்ஸ் கேரி 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடரை 2-0 என வென்றது.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு மிட்செல் மார்ஷ் அனைவராலும் பாராட்ட கூடிய ஒரு செயலை செய்துள்ளார். அது என்னவென்றால் ஆட்ட நாயகன் விருதை போட்டியை காண வந்த ஆஸ்திரேலிய ரசிகருக்கு மிட்செல் மார்ஷ் வழங்கி உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ரசிகர் மகிழ்ச்சியில் திகைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்னர் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாங்கிய ஆட்ட நாயகன் விருதை சிறுவனுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது.
    • கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களான பின் ஆலன் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரச்சின் டேவன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர். ரச்சின் 35 பந்தில் 68 ரன்னும், கான்வே 46 பந்தில் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹேட் - டேவிட் வார்னர் களமிறங்கினர். ஹெட் 24 ரன்னிலும் வார்னர் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வேல் 25 ரன்னிலும் இன்ங்கிலிஸ் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த மார்ஷ் - டிம் டேவிட் அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் அரை சதம் கடந்தார். இறுதியில் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

    இதனால் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    • வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளனர்.
    • பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இரு டெஸ்ட் தொடருக்கு பிறகு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளனர். பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    டி20 அணிக்கான ஆஸ்திரேலிய அணி:-

    மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

    • மார்ஷின் செயலால் "காயமடைந்ததாக" முகமது ஷமி, ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
    • மார்ஷிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் சில நாட்கள் கடந்தன.

    இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

    இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி, ஒரு பேட்டியில் மார்ஷின் செயலால் "காயமடைந்ததாக" தெரிவித்தார். மார்ஷிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் சில நாட்கள் கடந்தன.

    இந்நிலையில் கோப்பை மீது கால் வைத்ததில் எந்த அவமரியாதையும் இல்லை என்று கூறிய அவர், கோப்பையை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று வலியுறுத்தினார்.

    • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.

    இந்நிலையில் உலகக் கோப்பையை அனைத்து வீரர்களும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி பார்த்திருப்போம். முத்தமிடுவதையும் கட்டி அணைப்பதையும் கோப்பை முன் நின்று புகைப்படம் எடுப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் இந்த முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த வீரர் மிட்செல் மார்ஷ், தனது காலை கோப்பைக்கு மேல் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டது கவலையாக இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த உலகக் கோப்பை இந்திய அணி வென்றிருந்தால் கொண்டாடிருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய கோப்பை ஆஸ்திரேலிய அணி வீரர் காலில் இருப்பதை பார்ப்பதற்கு வேதனையாக இருப்பதாக ரசிகர்கள் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்.
    • மிட்செல் மார்ஷ் அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் கடந்த மே மாதம் வெளியான பாட்காஸ்ட் ஒன்றுக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், தனது அணி தான் கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இதுதவிர, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் எவ்வளவு ரன்களை அடிக்கும் என்பதையும் அவர் கணித்திருக்கிறார். அதன்படி, ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 450 ரன்களை குவிக்கும் என்றும் அடுத்து களமிறங்கும் இந்திய அணி வெறும் 65 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடையும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பதில் தொடர்பான மீம்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்
    • உலகக் கோப்பையில் 225 அடித்ததுடன், இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம் பிடித்துள்ளார். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். 6 போட்டிகளில் 225 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 121 ரன்கள் அடித்தார். இலங்கைக்கு எதிராக அரைசதம் விளாசினார்.

    டிராவிஸ் ஹெட் அணிக்கு திரும்பியதும் மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் அவசரமாக சொந்த நாடு திரும்ப இருக்கிறார். இதனால் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகும். ஆஸ்திரேலியா வருகிற 4-ந்தேதி இங்கிலாந்தையும், 11-ந்தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது.

    மிட்செல் மார்ஷ் சொந்த காரணத்திற்கான அணியிலிருந்து விலகியுள்ளார். அவர் மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    • ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும்.
    • இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    டெல்லி:

    இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்திலும், இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா ஆல்-அவுட் செய்து வீழ்த்தும் என ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக இருக்கும். இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும். ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும். இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போதைய ஐபிஎல் தொடரில் மிட்செல் மார்ஷ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×