என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாற்றுக்கட்சியினர்"
- ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் ஏற்பாடு
- மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார் உள்பட பலர் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள், மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கப்பச்சிவினோத் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் ஜெயராமன், நகர அவை தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார்,இணைந்தார்.
- அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் இணைந்தனர்.
திருப்பூர்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆலோசனையின் படி திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் இன்று வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார், மக்கள் நீதி மய்யம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரைட் முத்துக்குமார், தி.மு.க., ஐ.டி., விங் வாலிபாளையம் பகுதி துணை செயலாளர் அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நல்லூர் பகுதி செயலாளர் வி.பி.என். குமார், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதரன், சுரேஷ், ரமேஷ் குமார் மற்றும் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மேயர் மகேஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்
- மாநில அயலக அணி துணை செயலாளர் ஏற்பாட்டில் நடந்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் மாநில அயலக அணி துணை செயலாளர் பாபு வினிபிரட் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சி யினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில அயலக அணி துணை செயலாளர் பாபு வினிபிரட் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரகுமார், பி.எஸ்.பி. சந்திரா மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாற்று கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க. வில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொன் னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு 6-வது முறையாக பொறுப்பேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப் பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி பொறுப் பேற்ற 2 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் கடந்த 27 ஆண்டுகளாக கட்சியில் உழைத்து இந்த பொறுப் பிற்கு வந்துள் ளேன். மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டேன். மாநக ராட்சி புதிய அலுவலக கட்டிட திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மாநகராட்சி மேயர் இருக்கை யில் என்னை அமர வைத்து அழகு பார்த்தார். ஏழைத் தொண்டராகிய என்னை இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்துள்ளார். நீங்களும் தி.மு.க.விற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் தி.மு.க. உங்கள் பின்னால் நிற்கும். இதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண் டும். கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப் புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
இந்திய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி.என்.ஆர். பாரி கணபதி தலைமையில் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி திருப்பூர் அவினாசி ரோடு சாமுண்டிபுரம் பகுதியில் இருந்து அ.தி.மு.க., மற்றும் மாற்று அமைப்புகளை சார்ந்த முருகன், ராஜபாண்டி, ரஞ்சித், பாலசுப்ரமணியம், பரமேஸ்வரி மற்றும் சுமார் 50பேர் மாவட்ட செயலாளர் சோனைமுத்து தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி , மாநில நிர்வாக குழு உறுப்பினர் பிஎன்ஆர்.பாரிகணபதி முன்னிலையில் தங்களை இந்திய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் முருகேசன் ,மாவட்ட துணைச் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம்,ஜூன்.16-
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னி லையில் தங்களை இணை த்துக் கொண்டனர். கப்பலு டையான் சதா. சதீஷ் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பா.ஜ.கவில் இணைந்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார் . பட்டியலின மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்துள்ளது என்பதை பிற கட்சிகள் நேரில் வந்தால் விவாதிக்கலாம் என கூறிேனன். இதுவரை யாரும் வரவில்லை.
அரசியலமைப்பு சட்டம் இயற்ற இந்திய அரசியல் சாசன தலைவராக அம்பேத்கரை பரிந்துரைத்தது ஜனா சங்கத்தின் தலைவர் சாம் பிரசாத் முகர்ஜி தான்.
சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு 1989-ம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்குவதற்கு ஜனசங்கமே காரணமாக அமைந்தது.
மத்திய பிரதேச மாநி லத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.ஆனால் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் பொய் பேசி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்