என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுபோதை"
- யானை நடமாட்டம் அதிகரித்ததால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையை வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர்.
- மயங்கி விழுந்த இளம்பெண் ஆம்புலன்ஸ் மூலம் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம் அடுத்த வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து விட்டு செல்வார்கள்.
இதற்கிடையே யானை நடமாட்டம் அதிகரித்ததால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையை வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர். அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள், அங்குள்ள ஓடையில் குளித்துவிட்டு சென்று வருகின்றனர். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஓடையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் வைதேகி நீர்வீழ்ச்சி ஒடையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கோவை மாநகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர் ஒருவருடன் அங்கு வந்திருந்தார்.
இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென இளம்பெண் மயங்கி விழுந்து விட்டார். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் இளம்பெண் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது இளம்பெண் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர் ஊட்டியை சேர்ந்தவர் என்பதும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இளம்பெண் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.
இருவரும் விடுமுறை என்பதால் இங்கு வந்ததாகவும், 2 பேரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதில் இளம்பெண் போதை தலைக்கேறிய நிலையில் மயங்கியதும் தெரியவந்தது. முதலுதவி செய்து மாணவியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- வீரன் மற்றும் அண்ணாமலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
- படுகாயமடைந்த வீரன்,அண்ணாமலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கடலூர்
வடலூர் வள்ளலார் நகர் சித்தர் தெருவை சேர்ந்தவர் ராஜவன்னியன் என்பவரின் மகன் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை. இவர்கள் இருவரும் வடலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி மாலையில் வீரனும் தம்பி அண்ணாமலையும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த வீரன் மற்றும் அண்ணாமலை வழியில் செல்கின்ற பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு இளைஞர்கள் நாங்கள் இப்படி தான் செய்வோம் எனவும் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி வீரன் மற்றும் அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் செய்துள்ளனர்.
இந்நிலையில் போதையில் இருந்த இளைஞர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பினால் இருவரையும் தாக்கினர். இதில் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த வீரன்,அண்ணா மலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வீரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வடலூர் புதுநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் கோபிநாத் என்கிற விக்னேஷ் (வயது 19) கோட்டக்கரை மாருதி நகரைச் சார்ந்த ரகோத்தமன் மகன் சஞ்சய் (19) அன்னை சத்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் (18) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து கடலூர் சிறையிலும் மேலும் 17 வயது சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- ராஜபாளையம் அருகே மதுபோதையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் பலியானார்.
- சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் உள்ளது.
இந்தத் தெப்பக்குளம் அருகில் பாலம் உள்ளது. அதில் நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க நபர் மது போதையில் படுத்து இருந்தார். அவர் திடீரென தவறி தெப்பக்குளத்தில் விழுந்து விட்டார்.
இதனை கண்ட துப்புரவுத்தொழிலாளர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தெப்பக்குளத்தில் தவறி விழுந்து பலியானவர் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து சேத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜகணபதி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்