search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டை ஓடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.
    • எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர்.

    ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் கடந்த 2018-ம் ஆண்டு பழமையான உடைந்த மண்டை ஓட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    இந்த மண்டை ஓடு 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு ஷானிதர் இசட் (மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட குகையின் பெயர்) என்று பெயரிடப்பட்டது.

    இந்த நிலையில் நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து அப்பெண்ணின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.

    அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர். பின்னர் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள்நியாண்டர்தால் பெண்ணின் 3டி மாதிரியை உருவாக்கினர்.

    • முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மருத்துவ உதவியாகும்.

    சென்னை:

    மண்டையை உடைத்து விடுவேன் என்று சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால் ஒரு மனிதனின் மண்டை ஓடு என்பது பாதுகாப்பு பெட்டகம் போன்றது. மூளை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை மண்டை ஓடுதான் பாதுகாக்கிறது.

    இந்த மண்டை ஓடு உடைந்தால் ஆபத்து. விபத்து, தலையில் அடிபடுதல் போன்றவற்றால் சில நேரங்களில் மண்டை ஓடு உடைவதுண்டு. அவ்வாறு மண்டை ஓடு உடைந்து தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடும்.

    இந்த மாதிரி மண்டை ஓட்டு சிகிச்சைக்கு ஆபரேசன் செய்து 'பீக்' எனப்படும் பிளாஸ்டிக்கை அதிக வெப்ப நிலையில் உருக்கி தயாரிக்கப்படும் ஒரு விதமான மெட்டீரியலை பொருத்தி வந்தனர். இது இலகுவாக இருப்பதால் அந்த இடத்தில் தெரியாமல் ஏதாவது அடிபட்டால் உள்ளே அமுங்கிவிடும்.

    இந்நிலையில் அதற்கு பதிலாக 'டைட்டானியம்' உலோகத்தால் புதிய மெட்டீரியல் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. இதை பொருத்த சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. அதிலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.

    இந்நிலையில் முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    கொளத்தூரை சேர்த்த செல்வமணி, பாடியை சேர்ந்த ரவி, கோயம்பேட்டை சேர்ந்த கிஷோர் ஆகியோர் தனித்தனி விபத்துகளில் சிக்கி மண்டை உடைந்தவர்கள். இவர்களுக்கு டைட்டானியம் உலோகத்திலான மண்டை ஓடு பொருத்தப்பட்டுள்ளது.

    இதுபற்றி மருத்துவமனை டீன் நாராயணசாமி கூறியதாவது:-

    இந்த நவீன சிகிச்சை முறை செலவு அதிகம். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரது சீரிய முயற்சியால் இந்த சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியிலும் சாத்தியமாகி உள்ளது.

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையும் செய்யப்படுகிறது. இந்த மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சையை அளித்த டாக்டர்கள் கோடீஸ்வரன், சந்திரசேகர் ஆகியோர், இது சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மருத்துவ உதவியாகும்' என்றனர்.

    • மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம்.
    • போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ெரயில் நிலையம் அருகே முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு ஏராளமான புதர்களும் உள்ளன.

    இதில் ஒரு புதர் அருகே சிலர் சென்ற போது, அங்கு மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதைப் பார்த்த ரெயில்வே பணியாளர்கள், நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் மார்த் தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம். இருப்பினும் அது யார்? யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? அல்லது தற்கொலை செய்தவர்கள் எலும்புக் கூடா? என விசாரணை நடக்கிறது.இதன் முடிவில் தான் உண்மை தெரியவரும், என்றனர். மார்த்தாண்டம் ரெயில் நிலையம் பகுதியில் எலும்புக்கூடு சிக்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.
    • திட்டமிட்டபடி இன்று காலை ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுவிலக்கு சோதனையின் போது ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தும் மரக்காணம் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த வாகனங்கள் அனைத்தும் இன்று (9-ந்தேதி) ஏலம் விடப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.

    திட்டமிட்டபடி இன்று காலை ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது ஒரு கார் ஏலம் விடப்பட்ட போது காரில் இருந்த பிளாஸ்டிக் வாளியில் மண்டை ஓடு கிடந்தது. இதனை பார்த்ததும் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். எனவே அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்த மரக்காணம் போலீசார் அங்கு விரைந்தனர். மண்டை ஓட்டினை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மண்டை ஓடு காருக்குள் எப்படி வந்தது. இதனை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×