search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் பிரீமியர் லீக்"

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேமலதா 30 பந்தில் அரைசதத்தை அடித்து அசத்தினார்.
    • கார்ட்னர் 39 பந்தில் 60 ரன் எடுத்தார்.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.இதில் முதலாவது ஆட்டத்தில் குஜராத் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷோபியா டங்க்லி மற்றும் லாரா வோல்வார்ட் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 41 ரன்னில் பிரிந்தது. லாரா வோல்வார்ட் 17 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

    இதையடுத்து களம் இறங்கிய ஹார்லீன் தியோல் 4 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷோபியா டங்க்லி 23 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து தயாளன் ஹேமலதா மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி உ.பி. அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேமலதா 30 பந்தில் அரைசதத்தை அடித்து அசத்தினார். அவர் 33 பந்தில் 57 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஆஷ்லே கார்ட்னருடன் சுஷ்மா வெர்மா ஜோடி சேர்ந்தார்.

    இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியில் மிரட்டிய கார்ட்னர் 39 பந்தில் 60 ரன்னும், ஹேமலதா 33 பந்தில் 57 ரன்னும் எடுத்தனர்.

    உ.பி.வாரியர்ஸ் அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், பர்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், அஞ்சலி ஷர்வானி, ஷோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி ஆடி வருகிறது.

    • 4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்.
    • இரவு 7.30 மணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியுடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.

    இதுவரை 16 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மும்பை இந்தியன்சும் (10 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்சும் (8 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டி இருக்கின்றன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு உ.பி. வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

    3 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ள உ.பி. வாரியர்ஸ் அணி எஞ்சிய இரு லீக்கில் (குஜராத் மற்றும் டெல்லிக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். அடுத்த சுற்றை எட்டி விடலாம். சொல்லப்போனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி விட்டால் மற்ற இரு அணிக்குரிய வாய்ப்பு தகர்ந்து விடும்.

    2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ள பெங்களூரு அணி தனது கடைசி லீக்கில் நாளை பலம் வாய்ந்த மும்பையை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே சமயம் உ.பி. வாரியர்ஸ் தனது கடைசி இரு லீக்கிலும் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் உ.பி., குஜராத், பெங்களூரு மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் பெங்களூரு முன்னிலையில் இருந்தால் வாய்ப்பு கிட்டும்.

    4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்து, உ.பி. வாரியர்சை விட ரன்ரேட்டில் முந்தினால் ஒரு வேளை குஜராத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சினே ராணா தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, அலிசா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்சை பிரபோர்ன்ஸ் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு சந்திக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி முதலிடத்தை உறுதி செய்யும் முனைப்புடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
    • சோபி டிவைன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 99 ரன்கள் விளாசினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 68 ரன்கள் அடித்தார். ஆஷ்லி கார்ட்னர் 41 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன் இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தனர். அதிரடியாக ஆடிய மந்தனா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். சிக்சர் மழை பொழிந்த சோபி டிவைன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 99 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மகளிர் பிரீமியர் லீக்கில் அவர் ஒரு ரன்னில் முதல் சதத்தை தவறவிட்டார். அதன்பின் எலிஸ் பெர்ரி, ஹெதர் நைட் இருவரும் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.

    27 பந்துகள் மீதமிருந்த நிலையில், பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எலிஸ் பெர்ரி 19 ரன்களுடனும், ஹெதர் நைட் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • லாரா வோல்வார்ட்- சபினேனி மேகனா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.
    • பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் அணியின் துவக்க வீராங்கனை சோபியா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், லாரா வோல்வார்ட்- சபினேனி மேகனா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. மேகனா 31 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் லாராவுடன் ஆஷ்லி கார்ட்னர் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அரை சதம் கடந்த லாரா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஷ்லி 41 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

    பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட் வீழ்த்தினார். சோபி டிவைன், பிரீத்தி போஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • உ.பி.வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
    • அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 38 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் அடித்தனர்

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

    உபி வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய மும்பை அணி, 127 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 35 ரன்களும், இஸ்ஸி வோங் 32 ரன்களும் சேர்த்தனர்.

    இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி, 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது. தஹ்லியா மெக்ராத் 38 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 3வது பந்தில் சோபி எக்லெஸ்டோன் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். உ.பி.வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை 129 ரன்கள் சேர்த்ததால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு உ.பி. வாரியர்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

    • மும்பையில் ஹேலி மேத்யூஸ் 35, இஸ்ஸி வோங் 32, ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.
    • உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. உபி வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு முனையில் இஸ்ஸி வோங் அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்தில் 32 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.

    இறுதியில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக ஹேலி மேத்யூஸ் 35, இஸ்ஸி வோங் 32, ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.

    உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய டெல்லி வீராங்கனை மாரிசான் கேப் 36 ரன்கள் சேர்த்தார்
    • கிம் கார்த், தனுஜா கன்வார், ஆஷ்லி கார்ட்னர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 57 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் 51 ரன்களும் (நாட் அவுட்) விளாசினர்.

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாறிய டெல்லி அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் மெக் லேனிங் 18 ரன்கள், அலிஸ் கேப்சி 22 ரன்கள் எடுத்தனர்.

    நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய மாரிசான் கேப் 36 ரன்களும், அருந்ததி ரெட்டி 25 ரன்களும் அடித்து நம்பிக்கை அளித்தனர். எனினும் பின்கள வீராங்கனைகள் சோபிக்காததால் டெல்லி அணி 18.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிம் கார்த், தனுஜா கன்வார், ஆஷ்லி கார்ட்னர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

    • குஜராத் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.
    • அதிரடியாக ஆடி அரை சதம் கடந்த லாரா, 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் துவக்க வீராங்கனை சோபியா 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், லாரா வோல்வார்ட்- ஹர்லீன் தியோல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. ஹர்லீன் தியோல் 31 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், லாராவுடன் ஆஷ்லி கார்ட்னர் இணைந்தார்.

    அதிரடியாக ஆடி அரை சதம் கடந்த லாரா, 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஆஷ்லியுடன் தயாளன் ஹேமலதா இணைய, 20 ஓவர் முடிவில் குஜராத் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. ஆஷ்லி 51 ரன்களுடன் களத்தில் இருந்தார்

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது. 

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக கனிகா 46 ரன்கள் சேர்த்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ், 19.3 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்கள் சேர்த்தார். கிரண், தீப்தி சர்மா தலா 22 ரன்கள் அடித்தனர். பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கேப்டன் மந்தனா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். சோபி டிவைன் 14 ரன்கள், எலிஸ் பெர்ரி 10 ரன்கள், ஹீதர் நைட் 24 ரன் என ஆட்டமிழந்தனர். அதன்பின் கனிகா அஹுஜா- ரிச்சா கோஷ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.

    அதிரடியாக ஆடிய கனிகா 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரிச்சா கோஷ் தொடர்ந்து ஆடி வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 12 பந்துகள் மீதமிருந்த நிலையில், 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 31 ரன்களுடனும், ஷ்ரேயங்கா பாட்டீல் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த போட்டியில் பெங்களூரு அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். முதல் 5 லீக் ஆட்டங்களிலும் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. 

    • அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், தீப்தி சர்மா 22 ரன்களும் சேர்த்தனர்.
    • பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ், ரன் குவிக்க திணறியது. துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி ஒரு ரன்னிலும், தேவிகா வைத்யா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கிரண் 22 ரன்கள் சேர்த்தார். அதன்பின் கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், தீப்தி சர்மா 22 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 19.3 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சோபனா ஆஷா, ஷோபி டிவைன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் அணி 107 ரன்களை எடுத்து தோற்றது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 51 ரன்கள் குவித்தார். யஸ்திகா பாட்டியா 44 ரன்களும், நாட் சீவர் பிரண்ட் 36 ரன்களும் சேர்த்தனர்.

    குஜராத் சார்பில் ஆஷ்லி கார்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிம் கார்த், தனுஜா கன்வார், சினேஹ் ராணா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. மும்பை அணியின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. மேலும் மும்பை தான் ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.
    • இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன.

    இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியை குஜராத் அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற குஜராத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. யஸ்திகா பாட்டியா 44 ரன்களும், நாட் ஷிவர் பிரண்ட் 36 ரன்களும் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 31 பந்துகளில் 51 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 

    குஜராத் தரப்பில் ஆஷ்லி கார்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிம் கார்த், தனுஜா கன்வார், சினேஹ் ராணா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    ×