என் மலர்
கிரிக்கெட்

லாரா வோல்வார்ட்
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் ஜெயண்ட்ஸ்
- லாரா வோல்வார்ட்- சபினேனி மேகனா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.
- பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் அணியின் துவக்க வீராங்கனை சோபியா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், லாரா வோல்வார்ட்- சபினேனி மேகனா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. மேகனா 31 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் லாராவுடன் ஆஷ்லி கார்ட்னர் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அரை சதம் கடந்த லாரா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஷ்லி 41 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட் வீழ்த்தினார். சோபி டிவைன், பிரீத்தி போஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.