search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் பிரீமியர் லீக்"

    • 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிகா பாண்டே- ராதா யாதவ் ஜோடி அதிரடியாக ஆடியது.
    • மும்பை அணி தரப்பில் இஸ்சி வாங், ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    மும்பை:

    மகளிர் உலகக் கோப்பை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

    கேப்டன் மெக் லேனிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. மெக் லேனிங் 35 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். ஷபாலி வர்மா 11 ரன், மாரிசான் கேப் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிகா பாண்டே- ராதா யாதவ் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியது.

    ஷிகா பாண்டே 17 பந்துகளில் 3 சிக்சர், 1 பவுண்டரி உள்பட 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இருவரும் சேர்ந்து 24 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    மும்பை அணி தரப்பில் இஸ்சி வாங், ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அமலியா கெர் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
    • டெல்லி அணியின் கேப்டன் மேக் லேனிங் 310 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டியை போலவே மகளிருக்கான பிரீமியர் லீக் போட்டி அறிமுகம் செய்தது.

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 21-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றது. மும்பை, 2-வது இடத்தையும், உ.பி. வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறின. பெங்களூரு, குஜராத் அணிகள் முறையே 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    நேற்று எலிமினேட்டர் ஆட்டம் நடந்தது. இதில் மும்பை அணி 72 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய உ.பி. வாரியர்ஸ் 110 ரன்னில் சுருண்டது.

    மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (26-ந் தேதி) நடக்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் மேக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஹர்மன் பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும மோதிய லீக் ஆட்டத்தில் தலா ஒன்றில் வெற்றி பெற்றன. மும்பை அணி 8 விக்கெட்டில் வென்று இருந்தது. டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    டெல்லி அணியின் கேப்டன் மேக் லேனிங் 310 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். மும்பை அணியில் புருன்ட் 272 ரன் எடுத்துள்ளார். மும்பை அணியின் சாய்னா இஷாக் 15 விக்கெட் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். 

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்று வரும் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் அணியை முடிவு செய்வதற்கான எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் ஷிவர் பிரன்ட் 72 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரண், 27 பந்துகளில், 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் விளாசிய நிலையில், இஸ்சி வாங் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சிம்ரன் ஷாயிக், சோபி எக்லெஸ்டோன் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இதன்மூலம் வாங் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    தீப்தி சர்மா 16 ரன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயாக்வாட் தலா 5 ரன்னில் ஆட்டமிழக்க, உ.பி. வாரியர்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இஸ்சி வாங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    • இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது.
    • இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி), மும்பை இந்தியன்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி) அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

    ஆனால் ரன்-ரேட் (+1.856) அடிப்படையில் முன்னிலை வகித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரன் ரேட்டில் (+1.711) பின்தங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது இடத்தையும், 8 புள்ளிகள் பெற்ற உ.பி.வாரியர்ஸ் அணி (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடத்தையும் பெற்று 'பிளே-ஆப்'சுற்றுக்கு தகுதி பெற்றன.

    2 வெற்றி, 6 தோல்விகளுடன் தலா 4 புள்ளிகள் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடத்தையும், குஜராத் ஜெயன்ட்ஸ் கடைசி இடத்தையும் பெற்று 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-அலிசா ஹீலி தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் மும்பை அணியும் (8 விக்கெட் வித்தியாசம்), 2-வது ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் அணியும் (5 விக்கெட்) வெற்றி பெற்றுள்ளன. இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். தோல்வி காணும் அணி போட்டியில் இருந்து வெளியேறும்.

    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை இந்தியன்ஸ்:

    ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நடாலி சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசபெல்லா வோங், அமன்ஜோத் கவுர், ஹூமைரா காஸி, ஜிந்திமணி கலிதா, சாய்கா இஷாக்.

    உ.பி.வாரியர்ஸ்:

    தேவிகா வைத்யா, அலிசா ஹீலி (கேப்டன்), கிரண் நவ்ஜிரி, தாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டன், சிம்ரன் ஷேக், பார்ஷவி சோப்ரா, அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட்.

    • மும்பை 2-வது இடத்தையும், உ.பி. 3-வது இடத்தையும் பிடித்து `பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
    • இரு அணிகளும் மோதிய `லீக்’ சுற்றில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் `லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

    இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. `லீக்' ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் `லீக்' சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்தது.

    இதன் முடிவில் டெல்லி, மும்பை அணிகள் தலா 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றன. நிகர ரன் ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    மும்பை 2-வது இடத்தையும், உ.பி. 3-வது இடத்தையும் பிடித்து `பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின. உ.பி. 8 புள்ளி (4 வெற்றி, 4 தோல்வி) பெற்றது. பெங்களூரு, குஜராத் தலா 4 புள்ளியுடன் (2 வெற்றி, 6 தோல்வி) 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு எலிமினேட்டர் ஆட்டம் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நாளை (24-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை-உ.பி. அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லியுடன் மோதும். இறுதி ஆட்டம் 26-ந்தேதி நடக்கிறது. தோல்வி அடையும் அணி வெளியேறும்.

    இதனால் வெற்றிக்காக மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் கடுமையாக போராடும். இரு அணிகளும் மோதிய `லீக்' சுற்றில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. எனவே நாளைய ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது.
    • டெல்லி அணியின் துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங்- ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

    டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங்- ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ஷபாலி வர்மா 21 ரன்களும், மெக் லேனிங் 39 ரன்களும் விளாசினார். முன்னதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த மாரிசான் கேப்- அலைஸ் கேப்சி இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சூழ்நிலையில், அலைஸ் கேப்சி 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெஸ் ஜோனாசன் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் மாரிசான் அடுத்த இரண்டு பந்துகளில் வெற்றியை உறுதி செய்தார். அவர் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    13 பந்துகள் மீதமிருந்த நிலையில், டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    • தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் குவித்தார்.
    • டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய துவக்க வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் 19 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் அலிசா ஹீலி 36 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சிம்ரன் ஷாயிக் 11 ரன்களிலும், கிரண் 2 ரன்னிலும், தீப்தி சர்மா 3 ரன்னிலும், ஷோபி ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர்.

    அதேசமயம் மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய தஹ்லியா மெக்ராத் அரை சதம் கடந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

    டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, அந்த அணியின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் மும்பை அணியை சமன் செய்யும். இதில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். எனவே, இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறுவதடன், மும்பை அணியைவிட அதிக ரன் ரேட் பெறவேண்டும். 

    • முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
    • அமலியா கெர் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் தலா 29 ரன்கள் எடுத்தனர். மும்பை தரப்பில் அமலியா கெர் 3 விக்கெட் கைப்பற்றினார். நாட் ஷிவர் பிரண்ட், இஸ்சி வாங் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் ஹெய்லி மேத்யூஸ் 24 ரன்களும், யஸ்திகா பாட்டியா 30 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அதன்பின் நாட் ஷிவர் பிரண்ட் 13 ரன், கேப்டன் கவுர் 2 ரன், பூஜா வஸ்த்ராகர் 19 ரன் என ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அபாரமாக ஆடிய அமலியா கெர், 21 பந்துகள் மீதமிருந்த நிலையில் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்ததால், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமலியா கெர் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். அவர் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. டெல்லி அணி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    • இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.
    • புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்த நிலையில், இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கின்றன.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.

    இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அலிசா ஹீலே தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணி மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.
    • 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின.

    முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்தார். இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஷபாலி வர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் மெக் லேனிங் (32 நாட் அவுட்), அலைஸ் கேப்சி (38 நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். இதனால் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது. அத்துடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. 

    • மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்தார்.
    • டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ், டாப் ஆர்டர் வீராங்கனைகளை விரைவில் இழந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (23 ரன்கள்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.

    டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    • முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
    • உ.பி.வாரியர்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவது ஆட்டத்தில் குஜராத் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய கார்ட்னர் 39 பந்தில் 60 ரன்னும், ஹேமலதா 33 பந்தில் 57 ரன்னும் விளாசினர்.

    இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. அணியின் துவக்க வீராங்கனைகள் விரைவில் அவுட் ஆகினர். தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது 3வது அணியாக உ.பி.வாரியர்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ×