search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள் தடுப்பு"

    • பவானி போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
    • இப்பேரணி பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று கூடுதுறை அடைந்தது.

    பவானி:

    பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு பவானி போலீசார் ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    பவானி புதிய பஸ் நிலையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணி பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று கூடுதுறை அடைந்தது.

    இந்த பேரணியில் பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, போலீ சார் மற்றும் பவானி, மயிலம்பா டி, சித்தோடு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் என 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

    மாணவ, மாணவிகள் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தியும், எமதர்மராஜா, மது பாட்டில், சிகரெட் போன்ற வேடம் அணிந்தும் பொதுமக்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • போதை பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • காவல்துறை துணை கண்காணிப்பாளர் போதை பொருள் பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்.

    உடுமலை :

    உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் கே.ஆர்.கே. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.தேன்மொழி வேல் கலந்துகொண்டு போதை பொருள் பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்.உடுமலை போக்குவரத்து ஆய்வாளர் ஏ.வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியை கே.டி. பூரணி நன்றி கூறினார்.

    போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்தல் மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி குடிமங்கலம் போலீஸ் சார்பில் நடந்தது. நால்ரோடு பகுதியில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதச்சங்கிலி நடைபெற்றது.நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்ற மாணவர்கள், போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார், முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போதை பொருள் இல்லா பகுதியாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 11- ந்தேதி முதல் ஒரு வார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்க அறிவுறுத்தினார்.

    அதன்படி கள்ளக்குறிச்சியில் போதை ப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    போதைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு விளை விப்பதோடு, குடும்பத்தின் அமைதியான சூழலுக்கும் தீங்கு விளைவி க்கிறது. எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு உட்படாமல் இருத்தல் வேண்டும்.

    மேலும் குடும்பத்தை அழிக்கக்கூடிய போதைப் பழக்கத்தை அனைவரும் தவிர்த்து குடும்ப நலத்தை பேணிக்காப்பதோடு நாளைய சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். தொடர்ந்து போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் அல்லது பயன்பாடு தொடர்பாக ஏதேனும் அறிந்தால் மாவட்ட நிர்வா கத்தின் தொலைபேசி எண் 04151-228801 வாயிலாகவும் காவல்துறைக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

    மேலும் போதை ப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பள்ளி மாணவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் அகியோர் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்மணி, கள்ளக்கு றிச்சி ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) விஜய கார்த்திக்ராஜ், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×