search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொம்மை"

    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொம்மை'.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.



    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


    இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.



    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.


    பொம்மை போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை (ஜூன் 4) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளார். இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். 


    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.


    பொம்மை போஸ்டர்

    இந்நிலையில், 'பொம்மை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • குழந்தைகள் ரெயில் மற்றும் இசை நீரூற்று சேர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
    • பறவைகள் பூங்கா சிறுவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பயிற்சி பட்டறையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியரகம் தற்போது தஞ்சையின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் அருங்காட்சியகமாக கடந்த 14.01.2023 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் நில அளவை காட்சியரை, சரஸ்வதி மகால் நூலக காட்சியரை, உலோக, கற்சிற்ப காட்சியரை, பொது நிர்வாக காட்சியரை, நடந்தாய் வாழி காவிரி, விவசாய காட்சியரை, சோழர் ஓவிய காட்சியரை, கைத்தறி காட்சியரை, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், இசைக்கருவிகள், நிகழ்த்துக்கலை காட்சியரை என மொத்தம் 12 காட்சி அறைகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    தஞ்சாவூர் அருங்காட்சிய கத்தில் அமைந்துள்ள 7டி திரை அரங்கம் மற்றும் பறவைகள் பூங்கா சிறுவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. எண்ணற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்தை கண்டு களித்து வருகின்றனர். தஞ்சாவூர் அருங்காட்சி யகத்தில் கடந்த 25.01.23 முதல் 29.01.23 வரை தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு கலை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் குழந்தைகளை மேலும் கவரும் வண்ணம் 14.04.2023 முதல் குழந்தைகள் ரயில் மற்றும் இசை நீரூற்று சேர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சிய கத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சி மற்றும் பட்டறை கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறை தொடர்ந்து நடத்திட தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாணவர்க ளுக்கான கைவினைப் பொருள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    தஞ்சையின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வது தான் இப்பயிற்சியின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) உதவி ஆணையர் (கலால்) பழனிவேல், சுற்றுலா அலுவலர் நெல்சன், தாசில்தார் சக்திவேல், பிரபு, கலைச்செல்வி பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.


    பொம்மை

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கார்கி வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டார்.




    • இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை போஸ்டர்

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொம்மை' திரைப்படத்தின் முதல் பாடலான 'முதல் முத்தம்'பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    • திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மால் கோவில் உள்ளது.
    • பொங்கலை ஒட்டி 3 நாட்கள் திருவிழாவில் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து உருவாரம் வைத்து பக்தர்கள் வழிபடுவர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மால் கோவில் உள்ளது. இங்கு கால்நடை வளம் பெருகவும் அவற்றிற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவும் உருவாரங்களை வைத்து வழிபடுவது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது .குறிப்பாக பொங்கலை ஒட்டி 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து உருவாரம் வைத்து வழிபட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மார்கழி மாதம் துவங்கியதுமே தைப்பொங்கலை வரவேற்கும் ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவை கொண்டாடவும் உடுமலை பகுதி கிராம மக்கள் தயாராகி விடுவர்.

    இதையடுத்து புக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது .முன்பு இந்த தொழிலில் அதிக அளவு குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு காரணங்களால் மண்பாண்டம் மற்றும் உருவார பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் குடும்பத்தினர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது சில குடும்பத்தினர் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து உருவார பொம்மை தயாரிப்போர் கூறும்போது, கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் சிறப்பாக கொண்டாட கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.அதற்கேற்ப உருவார பொம்மைகளை அதிக அளவு ஆர்வத்துடன் தயாரிக்கிறோம். குளத்து மண்ணில் மணல், சாணம் உள்ளிட்டவற்றை கலந்து பொம்மைகள் செய்வதற்கான மண் தயார் செய்கிறோம். தேவையான உருவங்களை ஈர மண்ணில் கொண்டு வந்து சூளையில் விட்டு வேகவைக்கிறோம். தொடர்ந்து சுண்ணாம்பு மற்றும் பல வர்ணங்களை தீட்டி விற்பனை செய்கிறோம். உருவாரங்களை பொறுத்து ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்கிறோம். போதியலாபம் கிடைக்காவிட்டாலும் பாரம்பரிய தொழிலை கைவிடாமல் தொடர்கிறோம் என்றனர்.   

    • இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவி ளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார் .

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையம் உள்வளாகத்தில் "கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை" தொடங்கப்பட்டுள்ளது.

    முக்கியமான பண்டிகை களில் ஒன்றான நவராத்திரி பண்டிகை அனைவராலும், மிகவும் பக்தியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும்.

    தமிழ்நாட்டில் இவ்விழா "நவராத்தரி" என்ற பெயரிலும் கர்நாடகத்தில் "தசரா" என்ற பெயரிலும் குஜராத்தில் "தாண்டியா" என்ற பெயரிலும்மேற்கு வங்கத்திலும் வடஇந்தி யாவின் பிறபகுதிகளிலும் "துர்கா பூஜை" என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பூம்புகார் என்ற பெயரில் புகழ்பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்தொழல்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

    இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் "கொலு பொம்மைகள் கண்காட்சி" என்றபெயரில் சிறப்பானதொரு கண்காட்சி யினை நடத்தி வருகிறது.

    இக்கண்காட்சி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை (ஞாயிறு உட்பட) தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய நடைபெற உள்ளது.

    இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்று கொள்ளப்படும்.

    இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

    இக்கொலு கண்காட்ச்சி யில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்ப ட்டுள்ளன.

    அந்த வகையில் கொலு ப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள், அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், அத்திவரதர் நின்ற கோலம், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகர் செட், குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தர்பார் செட், மைசூர் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், கருட சேவை செட், வைகுண்டம் செட், துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு செட் போன்ற சிறப்பான செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் தருவிக்கப்பட்டு விற்ப னைக்கு வைக்கப்ப ட்டுள்ளன.

    சிறப்பு பொம்மைகளாக கல்கத்தா களிமண் பொம்மை கள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் விற்பனையில் இடம் பெற்றுள்ளன.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா., தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்சரவணகுமார், பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர்சக்தி தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×