search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dolls"

    • திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மால் கோவில் உள்ளது.
    • பொங்கலை ஒட்டி 3 நாட்கள் திருவிழாவில் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து உருவாரம் வைத்து பக்தர்கள் வழிபடுவர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மால் கோவில் உள்ளது. இங்கு கால்நடை வளம் பெருகவும் அவற்றிற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவும் உருவாரங்களை வைத்து வழிபடுவது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது .குறிப்பாக பொங்கலை ஒட்டி 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து உருவாரம் வைத்து வழிபட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மார்கழி மாதம் துவங்கியதுமே தைப்பொங்கலை வரவேற்கும் ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவை கொண்டாடவும் உடுமலை பகுதி கிராம மக்கள் தயாராகி விடுவர்.

    இதையடுத்து புக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது .முன்பு இந்த தொழிலில் அதிக அளவு குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு காரணங்களால் மண்பாண்டம் மற்றும் உருவார பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் குடும்பத்தினர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது சில குடும்பத்தினர் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து உருவார பொம்மை தயாரிப்போர் கூறும்போது, கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் சிறப்பாக கொண்டாட கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.அதற்கேற்ப உருவார பொம்மைகளை அதிக அளவு ஆர்வத்துடன் தயாரிக்கிறோம். குளத்து மண்ணில் மணல், சாணம் உள்ளிட்டவற்றை கலந்து பொம்மைகள் செய்வதற்கான மண் தயார் செய்கிறோம். தேவையான உருவங்களை ஈர மண்ணில் கொண்டு வந்து சூளையில் விட்டு வேகவைக்கிறோம். தொடர்ந்து சுண்ணாம்பு மற்றும் பல வர்ணங்களை தீட்டி விற்பனை செய்கிறோம். உருவாரங்களை பொறுத்து ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்கிறோம். போதியலாபம் கிடைக்காவிட்டாலும் பாரம்பரிய தொழிலை கைவிடாமல் தொடர்கிறோம் என்றனர்.   

    ×