search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள"

    • பதட்டம் நிலவியதால் போலீஸ் குவிப்பு
    • கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுண்ட் தெருவில் ஒரு வீட்டில் ஜெபக்கூட்டம் நடைபெற்று வந்தது. அங்கு ஜெபக்கூடம் கட்டும் பணி நடந்த போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று கட்டுமான பணிக்கான பொருட்கள் வந்ததால், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கு திரண்டனர்.

    மேலும் வாத்தியார்விளை ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வடசேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை சமரசம் செய்த துணை சூப்பிரண்டு நவீன்குமார், கட்டுமான பணிகள் குறித்து நாளை (இன்று)பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பணிகள் நடக்காது என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், ஜெப கூடம் கட்ட ஏற்கனவே தடை உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்கள் வந்துள்ளன. இந்த செயல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால், கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    ஜெபக்கூடம் கட்ட தடை கேட்டு ஏராளமானோர் திரண்டதால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பதட்டத்தை தணிக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    • மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க உத்தரவு
    • சாக்கடை ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டு வட்டவிளை, காந்திஜி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம், 42-வது வார்டுக்குட்பட்ட வேதநகர் கோவில் தெரு 1,2,3 பகுதிகளில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 52-வது வார்டு புல்லுவிளை-குளத்து விளை சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் போன்றவை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி பொறியாளர் ராஜசீலி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் அனிலா, ஸ்டாலின் பிரகாஷ், ரமேஷ், சுகதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள் ராஜேஷ், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். வீட்டு வரி குறைப்பு, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காண அவர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகர பகுதியில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே சாக்கடை ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் தூய்மை பணியாளர்கள் மூலமாக மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் ஓடைகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் ஓடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது
    • இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது.

    தாராபுரம்

    தாராபுரம் பகுதியில் சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. மாலையில் 3 மணிக்கு மேல் கருமேகம் சூழ்ந்து ஜில்லென குளிர்காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழை மெல்ல தொடங்கி சிறிது நேரத்தில் கனமழையாக பொழிந்தது.

    மழை மாலையில் 4மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை சூறாவளி காற்றுடன் பெய்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குறிப்பாக அலங்கியம் சாலையில் மழை நீர்தேங்கியது. அந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    அதே போல் மூலனூர், போளரை, கரையூர் பகுதியிலும் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் கால்நடைகளுக்கு போதுமான புற்கள் காடுகளில் வளர தொடங்கி விடும் என்றும், இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயில் குறைந்து இதமான காலநிலை நிலவியதுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் உஷ்ணத்தில் தவித்த மக்கள் உற்சாகமடைந்தனா்.

    பின்னா் இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது. 

    • ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது
    • தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி

    நாகர்கோவில் :

    சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் குடி யிருப்புகள் பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்ச மடைந்தனர். அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை புலி கடித்து கொன்றது.

    இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட னர். அங்கேயே முகாமிட்டு வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் புலி சிக்கவில்லை. தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்ததையடுத்து தேனியில் இருந்து எலைட் படையினரும் களக்காட்டில் இருந்து டாக்டர் குழுவினரும் வரவழைக்கப்பட்டு தேடும்பணி நடந்தது.

    2 இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டதுடன் 50 இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து நவீன காமிரா கொண்டு வரப்பட்டு இரவு நேரங்களில் புலி நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ட்ரோன் காமிரா மூலமா கவும் கண்காணிப்பு பணி நடந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் இல்லாத நிலை உள்ளது. வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் புலி நடமாட்டம் குறைந்தது. இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் புதுவியூகம் மேற்கொண்ட னர். ஆட்கள் நடமாட்டத்தை குறைத்தால் மட்டுமே புலியை பிடிக்க முடியும் என்று முடிவு செய்தனர்.

    இதனால் தற்போது தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எலைட் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். டாக்டர் குழுவினர் மட்டும் கண்காணித்து வருகிறார்கள். தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சிற்றாறு காலனி பகுதியில் அந்த பகுதி மக்களுடன் வனத்துறை யினர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் வன அதிகாரி இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். புலியை பிடிப்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • சொத்து வரி, மின்இணைப்பு , தண்ணீர் வரி உள்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியின் சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பயன்படுத்திக் கொள்ள வசதியாக கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக் குட்பட்ட கோட்டவிளை காமராஜர் படிப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு கியூ.ஆர்.கோடு செயலியை தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி சார்பில் கியூ.ஆர்.கோடு அட்டை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை வீட்டிலிருந்து தெரிவிக்கும் வகையில் கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வீட்டின் உரிமையாளர் பெயர் ரேஷன் கார்டில் உள்ள தகவல்கள், சொத்து வரி, மின்இணைப்பு தகவல்கள், தண்ணீர் வரி தகவல்கள் உள்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும். பொதுமக்கள் தங்களது புகார்களையும் இந்த கியூ.ஆர்.கோடு செயலி மூலமாக மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம். மின் இணைப்பு, தண்ணீர் கட்டணத்தையும் இதன் மூலமாக செலுத்தி கொள்ளலாம். எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

    முதல் கட்டமாக 4-வது வார்டுக்குட்பட்ட கோவில்விளை பகுதியில் தொடங்கப்பட்டுள்ள கியூ.ஆர்.கோடு செயலி நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். மாநகராட்சி ஊழியர்கள் அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார் கள்.

    52 வார்டுகளுக்கும் மாநகராட்சி ஊழியர்கள் சென்று இந்த பணியை மேற்கொண்டு உள்ளனர். ஒரு வீட்டில் கியூ.ஆர்.கோடு செயலியை அறிமுகப்படுத்த 20 நிமிடங்கள் ஆகிறது.

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர்.கோடு செயலி ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும். சுமார் 1 லட்சம் வீடுகளுக்கு கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் தென்மண்டல ஓ.பி.சி. பிரிவு தலைவர் ஜெயச்சந்தி ரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×