search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டங்கள்"

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்தது.
    • காளையார்கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் மறவமங்கலம் பஸ் நிலையம் முன்பு நடந்தது.

    காளையார் கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறவமங்கலம் பஸ் நிலையம் முன்பு தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் யோக.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் வக்கீல் அ.சரவணன் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் தோக்கப்பன், செல்லையா, திருநாவுக்கரசு, செல்வி மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அய்யப்பன் வரவேற்றார். மறவமங்கலம் கிளைச் செயலாளர் முகமது சக்கரியா நன்றி கூறினார்.

    காளையார்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கொல்லங்குடியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.கென்னடி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ணகுமார், ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் முத்தூர் கருப்பையா, செல்லபாண்டி, கண்ணப்பன், தென்னரசு கண்ணாத்தாள், கண்ணன், அழகப்பன், சந்திரன், நேரு, தமிழ்ச்செல்வன், அசோக், இளைஞரணி சக்திதாசன், தகவல் தொழில் நுட்ப அணி ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நாட்டரசன்கோட்டை பேரூர் செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

    • பென்னாகரம் தொகுதி-கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.
    • வேப்பனபள்ளி தொகுதி-திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கோவை புரட்சிதம்பி.

    தருமபுரி,

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவது அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது என்று இடைக்கால போது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளவர்கள் பற்றிய விபரம் வருமாறு:-

    பர்கூர் தொகுதி-தம்பிதுரை எம்.பி.

    பென்னாகரம் தொகுதி-கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.

    ஓசூர் தொகுதி-முன்னாள்அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.பாபு முருகவேல், கோவை புரட்சி தம்பி,வெங்கட்ராமன்.

    அரூர் தொகுதி-முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், தர்மராஜன், எம்.ஜி.குணசேகரன்.

    பாப்பிரெட்டிபட்டி தொகுதி-ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் இளங்கோவன், அதிரடி ஆறுமுகம், சாரதா.

    கிருஷ்ணகிரி தொகுதி-இலக்கிய அணி செயலாளர் சேகர், நெத்தியடி நாகையன், காஞ்சி ராமு.

    பாலக்கோடு தொகுதி-கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. ஜாகீர் உசேன், விஜய் கணேஷ்.

    வேப்பனபள்ளி தொகுதி-திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கோவை புரட்சிதம்பி.

    ஊத்தங்கரை தொகுதி-குறளார்கோபிநாதன், தில்லை கோபி.

    தருமபுரி தொகுதி-ஆர்.வி.என்.கண்ணன், மணிமேகலை, முஜிபுர் ரகுமான்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    ஈரோடு:

    அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் பிறந்த நாள் பொது விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.

    பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இணைக்கப்ப ட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்களில் பேசுபவர் விவரம் வருமாறு:

    ஈரோடு மேற்கு தொகுதியில் 19-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், நடிகர் காதல் சுகுமார், கோவை பலகுரல் தாமு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பவானி தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான சி.ஆர். சி.ரங்கநாதன், பி.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., நடிகர் வையாபுரி, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    அந்தியூர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஸ்வரி, கோவை அழகு, திருப்பூர் டி.ஏ.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 21-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.வும், தேர்தல் பிரிவு துணைச் செயலா ளருமான இன்பத்துரை, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான திருப்பூர் சிவசாமி, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயரும், மகளிர் அணி மாவட்ட செயலாளருமான மல்லிகா பரமசிவம், சிட்கோ சீனு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பெருந்துறை பகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பணன் எம். எல். ஏ, ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜே.கே. என்கிற எஸ்.ஜெயக்குமார், புதூர் மணி, என். கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பண்ணாரி, சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×