search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் திருட்டு"

    • வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது.
    • பைக் திருடிச்செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 10 நாட்களில் நகர பகுதியில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகள் திருடப்பட்டு வருகிறது. 'வீடு மற்றும் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.

    கடந்த 10 நாட்களில் அரியாங்குப்பம், பாகூர், பெரியக்கடை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், சேதராப்பட்டு, திருபுவனையில் தலா ஒரு பைக், உருளையன்பேட்டை, தவளக்குப்பத்தில் தலா 2 பைக்குகள் திருடப்பட்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதுதவிர வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி முழுவதும் 25-க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடப்பட்டுள்ளது.

    ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பைக்குகளை 3 பேர் சேர்ந்து பூட்டை லாவகமாக உடைத்து திருடிச்செல்லும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்து வரு கின்றனர். பைக் திருடிச் செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது. பைக் திருட்டில் வெளிமாநில கும்பல் களம் இறங்கி உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் மோட்டார், வயர் மற்றும் பைக் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி அருகே சின்னமனூர்- சுக்காங்கால்பட்டி சாலையில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். அவரது மனைவி விஜயலட்சுமி (வயது63). இவர்கள் சொந்தமாக விவசாய நிலம் மற்றும் தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.

    கோவிந்தராஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் விஜயலட்சுமி மட்டும் பண்ணை வீட்டில் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சீலப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே சில்வார்பட்டி, நல்லகருப்பன் பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (48). இவரது வீட்டில் இருந்த மோட்டாரை தேவதானப்பட்டியை சேர்ந்த பிச்சைபாண்டி (46) என்பவர் திருடிச் சென்றார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிச்சை பாண்டியை கைது செய்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்ததை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் முத்து (வயது45). தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (46). இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அேத பகுதியை சேர்ந்த கோகுலபாண்டியன், குருநாதபாண்டியன் ஆகியோர் செல்போனை திருடிச் சென்றனர். அவர்களை பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்பட ைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • மதுபோதையில் அவருடன் இருந்த மற்றொரு நண்பரும் அதே பைக்கில் தப்பி விட்டார்.
    • போலீசார் அடுத்தடுத்து இருந்த டோல்கேட் பகுதியில் தகவல் தெரிவித்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நத்தம்:

    மதுரை அய்யர்பங்களா பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது காளையார் கோவிலைச் சேர்ந்த பிரபு (வயது 30) என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. அதனால் அவருக்கு அபராதம் விதித்தனர். இதனையடுத்து பிரபு தனது நண்பர்களிடம் போலீசில் சிக்கிக் கொண்டது குறித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென பிரபு தனது பைக்கை வைத்து விட்டு போலீஸ்காரரின் பைக்கை லாவகமாக திருடிச் சென்று விட்டார்.

    மதுபோதையில் அவருடன் இருந்த மற்றொரு நண்பரும் அதே பைக்கில் தப்பி விட்டார். இது குறித்து போலீசார் அடுத்தடுத்து இருந்த டோல்கேட் பகுதியில் தகவல் தெரிவித்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி பகுதியில் இவர்கள் அசுர வேகத்தில் வந்த போது எதிரே நின்ற தனியார் பஸ் மீது மோதினர். இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனே அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரித்ததில் மதுரை போலீஸ்காரரின் பைக்கை திருடியது தெரியவந்தது. உடனே நத்தம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே படுக்கச் சென்றார்.

    பின்னர் நேற்று காலை வெளியே வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சரவணன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து போலீசார் பையூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் ஆரணி பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பிரவீன் குமார் என்பதும், சரவணன் பைக்கை திருடியதும் தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
    • பைக் பறிமுதல் செய்யப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த ரெட்டிவலம் பகுதியில் நேற்று நெமிலி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், நந்திவேடுதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி அதனை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கண்காணிப்பு கேமராவில் பதிவானது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 32). இவருக்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தங்களது வீட்டின் வெளியே வழக்கம் போல் நிறுத்தி வைத்து இருந்தார்.

    நேற்று மாலை அன்பரசு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது பட்ட பகலில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வது பதிவாகியுள்ளது.

    இதனையடுத்து அன்பரசு நாட்டறம்ள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வில்வநாதபுரத்தை சேர்ந்த வர் மகேஷ்பாபு (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தார். அதை யாரோ மர்ம கும்பல் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து மகேஷ் பாபு ராணிப்பேட்டை போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டை போலீசார் ராணிப் பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட, சோளிங்கர் அருகே உள்ள கொடைக்கல் காலனி பகுதியை சார்ந்த ஆகாஷ் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் மகேஷ் பாபுவின் மோட்டார் சைக்கிளை திரு டியதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • காட்பாடி ரெயில் நிலையத்தில் மடக்கி பிடித்தனர்
    • 4 வாகனங்கள் பறிமுதல்

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சோழாமூரை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 36).

    இவர் காட்பாடி திருவலம் கே வி குப்பம் லத்தேரி குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருடி வந்தார்.

    இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வைரமுத்து காட்பாடி ரெயில் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில் நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த வைரமுத்துவை மடக்கி பிடித்தனர்.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பல்வேறு இடங்களில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அவரிடமிருந்த 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வைரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறை ஊழியரின் பைக் திருடப்பட்டது.
    • காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), வனத்துறை ஊழியர் சம்பவத்தன்று இவர், தென்கரை மலை ப்பட்டி,
    வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் தனது மோ ட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். மர்ம நபர்கள் மோ ட்டார் சைக்கி ளை திருடி சென்று விட்ட னர். அதில் அரிவாள், ரூ. 500 மற்றும் 2 டைரிகள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள் இருந்தன.

    இது குறித்த புகாரின் பேரில் காடு பட்டி போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினார்
    • ெஜயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). இவர், நேற்று முன்தினம் மண்டலவாடி ஊராட்சிக்கு உட் பட்டவெள்ளைய கவுண்டனூர் பகுதியில் நடந்த எருதுவிடும்.

    திருவிழாவை பார்க்க தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட் டார். பூசாரிவட்டம் பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விழாவை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்ப மோட்டார்சைக்கிளை எடுக்க வந்தார். ஆனால், அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் வெள்ளையகவுண்டனூர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தபோது, மோட்டார் சைக்கிளை திருடியவர் அடையாளம் தெரிந்தது.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத் தியபோது, திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுதாகர் (வயது 27) எனத் தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கனகராஜின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர்.

    அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

    • பிடிபட்டவர் பிரபல பைக் திருட்டு கும்பலின் தலைவன் புறா ஆனந்த் என்பது தெரியவந்தது.
    • தமிழக மற்றும் புதுவையில் எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆலந்தூரை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற புறா ஆனந்த்(28).

    இவர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு மோட்டார் சைக்கிள் திருடும் கோஷ்டியாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். புதுவையில் ஒருமுறையும், தமிழகப் பகுதியில் ஒரு முறையும் என மாற்றி மாற்றி இவர்கள் பைக்குத் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவர்கள் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தப் பகுதியிலும் சிக்காத இவர்கள் தற்பொழுது. புதுவை உருளையன்பேட்டையில் சிக்கி உள்ளனர்.

    எங்கு திருட வேண்டும் என்று திட்டமிட்டு இவர்கள் செல்போன்களை கொண்டு செல்லாமல் எந்த ஒரு ஆதாரங்களும் இன்றி பைக்கை திருடி வந்துள்ளனர்.

    அப்படி திருடும் பைக் நம்பர் பிளேட் மாற்றி வண்ணத்தை மாற்றி ஒன்றரை லட்ச ரூபாய் வரை மதிப்பிலான பைக்கை ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்றுள்ளனர். மது போதைக்கும் கஞ்சா போதைக்கும் அடிமையான இவர்கள் வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு விற்பதையே முக்கிய வேலையாக வைத்திருந்தனர்.

    உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகரை சேர்ந்த ஒருவரின் ரூ. 1 ½ லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த பைக் திருடப்பட்டதாக சி.சி.டி.வி. காட்சிகளுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் மேலும் சில இடங்களில் தேடினார்கள். அப்பொழுது ஆட்டுப்பட்டி என்ற பகுதியில் சிறுவன் ஒருவனிடம் வாகனத்தை திருடியவர் செல்போனை வாங்கி பேசுவது பதிவாகி இருந்தது.

    அந்தப் பகுதிக்கு சென்று அந்த சிறுவனை கேட்ட பொழுது, பைக் திருடன் அவனது அம்மாவிடம் பேச வேண்டும் என கூறி போனை வாங்கியதாக கூறினார்.

    அதில் தனது அம்மாவுக்கு போன் செய்து உடல்நிலை எப்படி இருக்கு என்று கேட்டு நாளை வீட்டுக்கு வந்து சாப்பிடுவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த செல்போன் எண்ணை பதிவு செய்த போலீசார் அதை கொண்டு மரக்காணம் வரை சென்று குற்றவாளியை பிடித்தனர். பிடிபட்டவர் பிரபல பைக் திருட்டு கும்பலின் தலைவன் புறா ஆனந்த் என்பது தெரியவந்தது.

    இவரது தந்தை விசுவநாதன் அப்பகுதியில் தொழிலதிபராக உள்ளார். பல கோடிக்கு சொத்து உள்ளது.

    இருப்பினும் மகன் பைக்குகளை திருடி கஞ்சா மற்றும் மது போதைக்கு செலவிட்டு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து பைக்கை பறிமுதல் செய்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான குழு ஆனந்தின் கூட்டாளி புதுப்பாக்கம் அருண்(19) என்பவரையும் கைது செய்துள்ளனர்.

    இந்த கும்பலை சேர்ந்த 6 பேர் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் பைக் உடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக மற்றும் புதுவையில் எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×