என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரையில் போலீஸ்காரர் பைக்கை திருடிய வாலிபர்கள் நத்தத்தில் சிக்கினர்
- மதுபோதையில் அவருடன் இருந்த மற்றொரு நண்பரும் அதே பைக்கில் தப்பி விட்டார்.
- போலீசார் அடுத்தடுத்து இருந்த டோல்கேட் பகுதியில் தகவல் தெரிவித்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நத்தம்:
மதுரை அய்யர்பங்களா பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது காளையார் கோவிலைச் சேர்ந்த பிரபு (வயது 30) என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. அதனால் அவருக்கு அபராதம் விதித்தனர். இதனையடுத்து பிரபு தனது நண்பர்களிடம் போலீசில் சிக்கிக் கொண்டது குறித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென பிரபு தனது பைக்கை வைத்து விட்டு போலீஸ்காரரின் பைக்கை லாவகமாக திருடிச் சென்று விட்டார்.
மதுபோதையில் அவருடன் இருந்த மற்றொரு நண்பரும் அதே பைக்கில் தப்பி விட்டார். இது குறித்து போலீசார் அடுத்தடுத்து இருந்த டோல்கேட் பகுதியில் தகவல் தெரிவித்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி பகுதியில் இவர்கள் அசுர வேகத்தில் வந்த போது எதிரே நின்ற தனியார் பஸ் மீது மோதினர். இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனே அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரித்ததில் மதுரை போலீஸ்காரரின் பைக்கை திருடியது தெரியவந்தது. உடனே நத்தம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்