search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் திருடிய வாலிபர் கைது
    X

    பைக் திருடிய வாலிபர் கைது

    • போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
    • பைக் பறிமுதல் செய்யப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த ரெட்டிவலம் பகுதியில் நேற்று நெமிலி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், நந்திவேடுதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி அதனை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×