search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருஞ்சாணி அணை"

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.38 அடியாக இருந்தது.
    • சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 9.87 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மதியம் நேரங்களில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் வெயில் அடித்து வந்தது. மதியத்துக்கு பிறகு சீதோஷண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மேற்கு மாவட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

    சிற்றாறு-1 அணைப் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 90.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்துள்ளனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.38 அடியாக இருந்தது. அணைக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.50 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.77 அடியாக உள்ளது.

    அணைக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 9.87 அடியாக உள்ளது. அணைக்கு 331 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 49.6, பெருஞ்சாணி 5.4, சிற்றாறு 1-90.2, சிற்றாறு 2-62.2, பூதப்பாண்டி 5.2, புத்தன் அணை 4.2, தக்கலை 2, பாலமோர் 15.2, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 18.3, அடையாமடை 7, முள்ளங்கினாவிளை 17.4.

    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்
    • காலை அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 73.19 அடியாக உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பெருஞ்சாணி அணை நேற்று மூடப்பட்ட நிலையில் அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் அணையில் இருந்து மீண்டும் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 73.19 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.12 அடியாக உள்ளது. அணைக்கு 691 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 785 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பெருஞ்சாணி அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.58 அடியாக உள்ளது. அணைக்கு 1102 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சுருளோட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 75.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி கன்னிமார் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிபாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்து உள்ள நிலையில் குழித்துறை கோதையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை கடந்தது. இதனால் பரணி ஆறு குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அருவிக்கரை திருவட்டாறு மூவாற்றுமுகம் குழித்துறை தேங்காய் பட்டணம் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரும் தண்ணீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.58 அடியாக உள்ளது. அணைக்கு 1102 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 482 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 1241 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1-அணையின் நீர்மட்டம் 11.94 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 11.94 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 16.20 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.22 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-19, பெருஞ்சானி-32.6, சிற்றார் 1-20.2, பூதப்பாண்டி-25.2, கன்னிமார்-38.6, புத்தன்அணை-30.8, சுருளோடு-75.2, தக்கலை-2 , பாலமோர்-62.4, திற்பரப்பு-6, ஆணைக்கிழங்கு-7.

    • பரளியாறு, குழித்துறை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • சுருளோட்டில் 75.2 மி.மீ.மழை பதிவு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சுருளோட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 75.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி கன்னிமார் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிபாறை பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிபாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்து உள்ள நிலையில் குழித்துறை கோதையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை கடந்தது. இதனால் பரணி ஆறு குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அருவிக்கரை திருவட்டாறு மூவாற்றுமுகம் குழித்துறை தேங்காய் பட்டணம் கரை யோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகி றார்கள். அணைக்கு வரும் தண்ணீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது.அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.58 அடியாக உள்ளது.அணைக்கு 1102 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 482 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.15 அடியாக உள்ளது.அணைக்கு 1241 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சிற்றார்1-அணையின் நீர்மட்டம் 11.94 அடியாக வும், சிற்றார் 2- அணை யின் நீர்மட்டம் 11.94அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 16.20 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.22 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-19, பெருஞ்சானி-32.6, சிற்றார் 1-20.2, பூதப்பாண்டி-25.2, கன்னிமார்-38.6, புத்தன்அணை-30.8, சுருளோடு-75.2, தக்கலை-2 , பாலமோர்-62.4, திற்பரப்பு-6,ஆணைக் கிழங்கு-7.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மழை இல்லாத நிலையில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் 3-வது நாளாக இன்றும் தடை விதித்து அறிவிப்பு பேனர் வைத்து உள்ளதோடு, அருவி அருகில் செல்லாமல் இருக்க கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1841 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பாசனத்திற்கு 272 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 4016 கனஅடி உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.40 அடியாக உள்ளது. அணைக்கு 691 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.66 அடியாக உள்ளது. அணைக்கு 113 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.76 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.06 அடியாகவும் உள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- (மில்லி மீட்டரில்)

    பேச்சிப்பாறை-10.8, பெருஞ்சாணி-3.4, சிற்றார்-1-3.4, சிற்றார்-2 -2.2, மாம்பழத்துறையாறு-2, புத்தன்அணை-2.8, சுருளோடு-1.4, கன்னிமாா்-6.2, பூதப்பாண்டி-1.6, பாலமோா்-7.2, அடையாமடை-3, ஆணைக்கிடங்கு-1.2, கோழிப்போர்விளை-2.8.


    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.13 அடியாக இருந்தது. அணைக்கு 1171 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.40 அடியாக உள்ளது. அணைக்கு 888 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடித்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெருஞ்சாணியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி வருவதால் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள்.

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.13 அடியாக இருந்தது. அணைக்கு 1171 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.40 அடியாக உள்ளது. அணைக்கு 888 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.20 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29, பெருஞ்சாணி 58, சிற்றார்-1-25.4, சிற்றார்-2-24.8, பூதப்பாண்டி 18.6, களியல் 4.4, குழித்துறை 8.4, நாகர்கோவில் 4.8, புத்தன் அணை-54.8, சுருளோடு 42.8, தக்கலை 15.1, குளச்சல் 6, இரணியல் 9.2, பாலமோர் 14.2 மாம்பழத் துறையாறு-21 ஆரல்வாய்மொழி 2 கோழி போர்வைவிளை 9.6 ஆணை கிடங்கு 194 முக்கடல் 30.2 குருந்தன்கோடு 9.4.

    ×