search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணி அணை 72 அடியை எட்டியது
    X

    கோப்பு படம் 

    பெருஞ்சாணி அணை 72 அடியை எட்டியது

    • பரளியாறு, குழித்துறை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • சுருளோட்டில் 75.2 மி.மீ.மழை பதிவு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சுருளோட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 75.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி கன்னிமார் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிபாறை பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிபாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்து உள்ள நிலையில் குழித்துறை கோதையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை கடந்தது. இதனால் பரணி ஆறு குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அருவிக்கரை திருவட்டாறு மூவாற்றுமுகம் குழித்துறை தேங்காய் பட்டணம் கரை யோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகி றார்கள். அணைக்கு வரும் தண்ணீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது.அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.58 அடியாக உள்ளது.அணைக்கு 1102 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 482 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.15 அடியாக உள்ளது.அணைக்கு 1241 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சிற்றார்1-அணையின் நீர்மட்டம் 11.94 அடியாக வும், சிற்றார் 2- அணை யின் நீர்மட்டம் 11.94அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 16.20 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.22 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-19, பெருஞ்சானி-32.6, சிற்றார் 1-20.2, பூதப்பாண்டி-25.2, கன்னிமார்-38.6, புத்தன்அணை-30.8, சுருளோடு-75.2, தக்கலை-2 , பாலமோர்-62.4, திற்பரப்பு-6,ஆணைக் கிழங்கு-7.

    Next Story
    ×