search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டு"

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.
    • அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அநேகமாக வருகிற சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.

    அதன் பிறகு முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை கட்சிப் பணிக்கு செல்லும் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. சொந்த கார் அல்லது தனியார் வாகனங்களை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும்.

    அதுமட்டுமின்றி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி தோறும் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர். அரசியல் ஆலோசனை கூட்டங்களும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அங்கு கட்சி நிர்வாகிகள் வரக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் உள்ள எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள் அலுவலகங்களை பூட்ட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தர விடுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் இப்போதே தங்களது அலுவலகத்தில் உள்ள சொந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    • பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.
    • விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.

    திருமலை:

    திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அங்கு பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.

    எனவே, அந்த மையங்களில் செருப்புகள் மற்றும் ஷூக்களை பக்தர்கள் பத்திரப்படுத்திவிட்டு, கோவிலுக்கு சென்று ஏழுமலை யானை தரிசித்துவிட்டு வந்து எடுத்துச் செல்வது வழக்கம்.

    இதற்கிடையில், தேவஸ்தானத்தின் இலவச காலணி காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சரியான கண்காணிப்பு இல்லாததால், பக்தர்கள் விட்டுச் செல்லும் விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப் படுகிறது.

    இந்நிலையில், திருமலையில் நான்கு மாட வீதிகள் அருகே அமைந்துள்ள காலணி காப்பகத்தில், செருப்புகளை சில பக்தர்கள் வைத்து, அவற்றுக்கு பூட்டுப் போட்டு சென்றனர்.

    இதை பார்த்த சிலர், 'இவ்வளவு பெரிய கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தான நிர்வாகத்தால் செருப்புக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா?' என கேள்வி எழுப்பினர்.

    • அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன.
    • 6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாட்கள் பூஜையானது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்கள், நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன. இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    சுமார் 6 மாத காலமாக தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது. இது உலகின் மிக பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்துள்ளது.

    இந்த பூட்டை உருவாக்கிய அலிகாரை சேர்ந்த கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்மா சமீபத்தில் காலமானார். அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்த பூட்டை பரிசாக வழங்கவேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை என அவரது மனைவி ருக்மணி ஷர்மா தெரிவித்தார்.


    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது.
    • அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது.

    உடுமலை:

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பஸ் நிலைய வளாகத்தில் தனியாக அறை கட்டப்பட்டது.சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் பெண்கள் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.அதுமட்டுமின்றி பஸ்நிலைய வளாகத்தில் பெண்களுக்கு தனியாக சுகாதார வளாக வசதியும் ஏற்படுத்தி தரவில்லை.இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

    கிராமத்தில் இருந்து உடுமலை நகருக்கு வருகை வருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்து கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர். பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து நிர்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. மேலும் ஆண்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகமும் பராமரிப்பில்லாமல் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் பஸ்சுக்காக காத்து கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

    அதுமட்டுமின்றி பெண்களுக்கு தனியாக சுகாதார வளாகம் அமைத்து கொடுப்பதுடன் பராமரிப்பில்லாமல் உள்ள ஆண்களுக்கான சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • பழனிசாமி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார்.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தாயம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55 ). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் மதியம் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாடிப்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி நீரேத்தான் மதுபான கடை அருகில் அனுமதியின்றி செயல்பட்ட 2 மதுபான பார்களும், சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த பணியில் மதுரை தெற்கு கோட்ட கலால் தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முகைதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவலிங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர். திடீரென்று அதிகாரிகள் சீல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்தந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம்.
    • டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம். இந்த டாஸ்மாக் கடையையொட்டி பார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது. வழக்கம்போல் இன்று காலையிலும் மது விற்பனை செய்யப்படு வதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பார் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடிமகன்களுடன் சேர்ந்து அந்த பாருக்கு பூட்டு போட்டு கோஷங்கள் எழுப்பினர். அருகாமை யிலேயே காவல் நிலையம் இருந்தும் மது விற்பனை நடைபெறுவதை போலீசார் தடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடைக்குள் இருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராததனால் அவரது நண்பர்கள் அவர் வீட்டுக்கு தேடி சென்றனர்.
    • குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே செம்பொன்விளையை சேர்ந்தவர் அருள்பாபி (வயது 48). தொழிலாளி. திருமணமாகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர் சாஸ்தாங்கரை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள் நேற்று அருள் பாபியின் வீட்டுக்கு தேடி சென்றனர்.அப்போது உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர்கள் குளச்சல் போலீசாருக்கு தகவல் கூறினர்.

    சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் தரையில் இறந்து கிடந்தார். வலது நெற்றியில் ரத்த காயம் காணப்பட்டது. அருகில் மதுபாட்டில், மிக்சர் பொட்டலம் கிடந்தது.

    பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அவர் அதிக போதையில் இறந்தாரா? அல்லது கட்டிலிலிருந்து தவறி விழுந்ததில் இறந்தாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்பே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் நிஷார் (வயது 34).

    இவர் நாகர்கோவில் அலெக் சாண்டரா பிரஸ் ரோட்டில் செல்போன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடை வைத்து உள்ளார். தினமும் காலை யில் கடையை திறந்து விட்டு இரவு பூட்டுவது வழக்கம்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிஷார் வேலை விஷயமாக கோவைக்கு சென்றார்.இதனால் கடையை அவரது உறவினர் கவனித்து வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்த போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்-டாப் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தொடர்ந்து தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி யில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு தனது அவரை சென்னைக்கு சென்றுள்ளார்.
    • வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்கம் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே முத்தய்யபிள்ளை மண்டபம் அருகில் உள்ள நேருஜி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பவானி.

    இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இவர்களுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் பவானி மகன் முகில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    தாய் தனியாக உள்ளார் என்று கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு தனது அவரை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பவானிக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனா்.

    இதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்கம் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் மா்ம நபா்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்வதாகவும், மேலும் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறுகள் ஏற்படுத்தியும் வந்தனர்.

    இதனால் இந்த பகுதி களில் அடிக்கடி விபத்து க்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் இது குறித்து பொதுமக்கள் அந்தியூர் போக்குவரத்து போலீசாரி டம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தது. இந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வாகன உரி மையாளர்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் வேறு இடங்களில் நிறுத்தி விட்டு வந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நில வியது.

    ×