search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த தொழிலாளி
    X

    கோப்பு படம் 

    குளச்சல் அருகே பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த தொழிலாளி

    • கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராததனால் அவரது நண்பர்கள் அவர் வீட்டுக்கு தேடி சென்றனர்.
    • குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே செம்பொன்விளையை சேர்ந்தவர் அருள்பாபி (வயது 48). தொழிலாளி. திருமணமாகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர் சாஸ்தாங்கரை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள் நேற்று அருள் பாபியின் வீட்டுக்கு தேடி சென்றனர்.அப்போது உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர்கள் குளச்சல் போலீசாருக்கு தகவல் கூறினர்.

    சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் தரையில் இறந்து கிடந்தார். வலது நெற்றியில் ரத்த காயம் காணப்பட்டது. அருகில் மதுபாட்டில், மிக்சர் பொட்டலம் கிடந்தது.

    பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அவர் அதிக போதையில் இறந்தாரா? அல்லது கட்டிலிலிருந்து தவறி விழுந்ததில் இறந்தாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்பே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×