search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ் டிரைவர்"

    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆம்புலன்சில் இருக்கும் நோயாளி ஒரு காலில் கட்டு போடப்பட்ட நிலையில், ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டு மது அருந்துவது போன்று காட்சி உள்ளது.
    • ஆம்புலன்ஸ் டிரைவர் மதுபாட்டிலை திறந்து கிளாசில் மதுபானம் ஊற்றி நோயாளிக்கு கொடுத்துள்ளார்.

    ஜகத்சிங்பூர்:

    ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் பகுதியில் டிர்டோல் என்ற இடத்தில் சாலையோரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி விட்டு, ஆம்புலன்சில் உள்ள நோயாளி ஒருவருக்கு மதுபானம் ஊற்றி கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    ஆம்புலன்சில் இருக்கும் நோயாளி ஒரு காலில் கட்டு போடப்பட்ட நிலையில், ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டு மது அருந்துவது போன்று காட்சி உள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் மதுபாட்டிலை திறந்து கிளாசில் மதுபானம் ஊற்றி நோயாளிக்கு கொடுத்துள்ளார். பின்னர் தானும் குடித்துள்ளார். சம்பவத்தின்போது பெண் மற்றும் சிறுவனும் உடன் இருந்துள்ளனர்.

    வைரலாக பரவிய இந்த காட்சிகள் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் வீடியோவில் இருக்கும் நோயாளி பெயர் நகுலே தெகுரி என்பது தெரியவந்தது. இவர் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் கூறும்போது, நோயாளி மதுபானம் வேண்டும் என விரும்பி கேட்டதாலேயே அவருக்கு கொடுத்ததாக கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜகத்சிங்பூர் தலைமை மாவட்ட மருத்து அதிகாரி டாக்டர் சேத்ரபாசிடாஷ் கூறுகையில், சம்பவம் நடந்தது தனியார் ஆம்புலன்ஸ். எனினும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்த டிரைவர் மீது சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    டிர்டோல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜூகல்கிஷோர்தாஸ் கூறுகையில், சம்பவம் தொடர்பாக முறையாக புகார் எதுவும் வரவில்லை. வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

    • உனிசெட்டி என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் சாலை வசதி சரியில்லை என்று கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் பெண்ணை கீழே இறக்கிவிட்டு சென்று விட்டார்.
    • இரவு 7 மணியளவில் வந்த வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் மலைக்கிராமத்துக்கு சென்று சேர்ந்துள்ளார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கோடகரை பகுதியை சேர்ந்த 27 வயது பழங்குடியின பெண் ஒருவர் தனது 4-வது பிரசவத்துக்காக கடந்த 8-ந்தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் 10-ந்தேதி கருத்தடை ஆபரேசன் செய்துள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது தாய் மற்றும் குழந்தையுடன் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    உனிசெட்டி என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் இதற்கு மேல் சாலை வசதி சரியில்லை என்று கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் அவர்களை கீழே இறக்கிவிட்டு சென்று விட்டார்.

    பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேன்கனிக்கோட்டை-கோடகரை இடையே இயக்கப்படும் வாகனமும் 3 மணிக்கு புறப்பட்டு சென்று விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் பச்சிளங்குழந்தையுடன் அவர்கள் தவித்துள்ளனர்.

    பின்னர் தங்களது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் சுகாதார துறை இணை இயக்குனர் பரமசிவனுக்கு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து அவரது ஏற்பாட்டில் இரவு 7 மணியளவில் வந்த வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் மலைக்கிராமத்துக்கு சென்று சேர்ந்துள்ளார்.

    உனிசெட்டியிலிருந்து கோடகரை செல்வதற்கு 15 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பச்சிளம் குழந்தையுடன் நடு வழியில் ஆம்புலன்சிலிருந்து இறக்கிவிட்டு சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட டிரைவரை உயர் அதிகாரிகள் அழைத்து எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் மின்விசிறியில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் அருகே உள்ள முத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 44). இவர் கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தங்கராஜ்க்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் மின்விசிறியில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    ×