search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு பூட்டை உடைத்து நகை  கொள்ளை
    X

    வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை

    • கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு தனது அவரை சென்னைக்கு சென்றுள்ளார்.
    • வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்கம் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே முத்தய்யபிள்ளை மண்டபம் அருகில் உள்ள நேருஜி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பவானி.

    இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இவர்களுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் பவானி மகன் முகில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    தாய் தனியாக உள்ளார் என்று கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு தனது அவரை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பவானிக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனா்.

    இதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்கம் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் மா்ம நபா்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×