search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புள்ளி மான்"

    • கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஒடி விட்டனர்.
    • வனச்சரக அலுவலர் துரையை விசாரணை செய்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட பரிகம் காப்புக்காடு, வடக்கு வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட மலையப்ப நகர் காட்டுவளவு சரகத்தில் கடந்த 4 -ம் தேதி காலை சுமார் 5.30 மணிக்கு மேல் பூரிகள் பகுதியைச் சேர்ந்த இராமசாமி மகன் துரை(45), என்பவர் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கறியாக வெட்டிக்கொண்டிருக்கும் போது அப்பகுதியில் தருமபுரி வனச்சரக பணியாளர்கள், வனப்பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஒடி விட்டனர்.

    பின்னர் தருமபுரி வனச்சரக அலுவலர் துரையை விசாரணை செய்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

    அதன் பேரில் மாவட்ட வன அலுவலர், அப்பல்ல நாயிடு உத்தரவுபடி வன உயிரின குற்ற வழக்கு பதியப்பட்டு இணக்க கட்டணமாக மேல் பூரிக்கல் பகுதியைச் சேர்ந்த துரை (45) என்பவருக்கு, 4 லட்சம் ரூபாயும், முனிய கவுண்டர் மகன் பாக்யராஜ் (38) என்பவருக்கு 35 ஆயிரம் ரூபாயும், மேல் பூரிகள் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் தமிழ்ச்செல்வன் (45) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசல மகன் பெரியசாமி (42) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், கம்பம் பட்டி பகுதியைச் சார்ந்த சுந்தர்ராஜன் மகன் சதீஷ்குமார் (32) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், சருகு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சித்தநாதன், என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்த வீரசிம்மன் (50), தலை கொண்டான் மகன் ஜெய்சங்கர் (29) ஆகிய இருவருக்கும் தால 10 ஆயிரம் ரூபாய் என 8 நபர்களிடமிருந்து விலங்கினை வேட்டையாடிய குற்றத்திற்காக இணக்க கட்டணமாக மொத்தம் ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

    • வண்ணிப்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில் புள்ளிமான் கிடந்தது.
    • வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றினர்.

    மீஞ்சூரை அடுத்த வண்ணிப்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில் புள்ளிமான் கிடந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் மீஞ்சூர் போலீசுக்கும், கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றினர். தண்ணீர் தேடி வந்த போது நாய்கள் கடித்ததில் புள்ளிமான் இறந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • புள்ளி மான் இறந்தது.
    • மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி சாலையோர புதரில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை கள அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மானை மீட்டு சிங்கம்புணரி கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் எஸ்.வி. மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் மான்கள் தெரு நாய்களாலும், வாகனங்களில் அடிபட்டும் இறந்து வருவது அந்த பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    • வனத்துறையினர் மானை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
    • அரசுக்கு சொந்தமான தேக்க மரங்கள் அதிக அளவில் குறைந்து வருகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே மா.கொளக்குடிபகுதியில் இன்று அதிகாலை 50 கிலோ எடை கொண்ட மான் ஒன்று பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. வீராணம் ஏரியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளது. அது தற்பொழுது வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதற்கு தங்குவதற்கு போதிய இடம் இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. கடந்த ஒரு மாதமாக சுத்தி திரிந்த இந்த மான் தற்பொழுது வெறி நாய்கள் துரத்தியதில் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சம் அடைந்தது. இந்த மானை பொது மக்கள் பத்திரமாக பிடித்து வைத்து, வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்த னர். வனத்துறைக்கு தகவல் கொடுத்து சுமார் 3 மணி நேரம் ஆகியும் வனத்துறையினர் மானை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.

    விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறை யினர் முன்வர வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது போன்று அலட்சி யம் காட்டும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதே போன்று அரசுக்கு சொந்த மானதேக்க மரங்கள் அதிக அளவில் குறைந்து வருகின்றன. இதற்கும் வனத்துறை என்ன செய்கி றது என்று தெரியா மல் போகிறது. காடுகளை வளர்க்கின்ற நேரத்தில் காடுகளை அழித்து வரும் குற்றவாளிகளை கண்ட றிந்து வனத்துறையி னர் தீவிரை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளர்.

    ×