search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுமன்னார்கோவிலில்  50 கிலோ எடை கொண்ட புள்ளிமான் பிடிபட்டது
    X

    பிடிபட்ட புள்ளி மான்.

    காட்டுமன்னார்கோவிலில் 50 கிலோ எடை கொண்ட புள்ளிமான் பிடிபட்டது

    • வனத்துறையினர் மானை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
    • அரசுக்கு சொந்தமான தேக்க மரங்கள் அதிக அளவில் குறைந்து வருகின்றன.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே மா.கொளக்குடிபகுதியில் இன்று அதிகாலை 50 கிலோ எடை கொண்ட மான் ஒன்று பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. வீராணம் ஏரியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளது. அது தற்பொழுது வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதற்கு தங்குவதற்கு போதிய இடம் இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. கடந்த ஒரு மாதமாக சுத்தி திரிந்த இந்த மான் தற்பொழுது வெறி நாய்கள் துரத்தியதில் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சம் அடைந்தது. இந்த மானை பொது மக்கள் பத்திரமாக பிடித்து வைத்து, வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்த னர். வனத்துறைக்கு தகவல் கொடுத்து சுமார் 3 மணி நேரம் ஆகியும் வனத்துறையினர் மானை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.

    விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறை யினர் முன்வர வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது போன்று அலட்சி யம் காட்டும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதே போன்று அரசுக்கு சொந்த மானதேக்க மரங்கள் அதிக அளவில் குறைந்து வருகின்றன. இதற்கும் வனத்துறை என்ன செய்கி றது என்று தெரியா மல் போகிறது. காடுகளை வளர்க்கின்ற நேரத்தில் காடுகளை அழித்து வரும் குற்றவாளிகளை கண்ட றிந்து வனத்துறையி னர் தீவிரை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளர்.

    Next Story
    ×