search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித அல்போன்சா கல்லூரி"

    • 65 கிலோ எடை பிரிவுக்குட்பட்ட குமித்தே போட்டியில் முதலிடம் பெற்றார்.
    • சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை

    மார்த்தாண்டம் :

    நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான 19-வது கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புனித அல்போன்சா கல்லூரி மாணவர் நிஷாந்த் 65 கிலோ எடை பிரிவுக்குட்பட்ட குமித்தே போட்டியில் முதலிடம் பெற்றார்.

    தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் நிஷாந்தையும், இத்தகைய சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும் உடற்பயிற்சி இயக்குனர்கள் ஏ.பி.சீலன் மற்றும் பி.அனிஷா ஆகியோரை கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் மற்றும் பேராசிரி யர்கள் வாழ்த்தினர்

    • மாவட்ட அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • போட்டியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், அனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

    கருங்கல் :

    கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள் பங்கேற்றன. தொடக்க விழாவில் லட்சுமிபுரம் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெறின்ஜோஸ் வாழ்த்துரை வழங்கினார்.போட்டியில் முதல் பரிசை புனித அல்போன்சா கல்லூரியும், 2-வது பரிசை லட்சுமிபுரம் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவவர்களுக்கு கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, கேம்பஸ் மினிஸ்டர் அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவ னேசன் ஆகியோர் பரிசு களையும், கேடயங்களையும் வழங்கியதோடு தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர். போட்டியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், அனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

    • 23-ந் தேதி நடக்கிறது
    • அரங்க போட்டிகள், அரங்கமல்லாத போட்டிகள் என 2 பிரிவுகளாக மொத்தம் 20 போட்டிகள் நடை பெறுகின்றன.

    கருங்கல் :

    கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போ ன்சா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் வரும் 23-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் கேரள அளவிலான கல்லூரிகள் இடையான கலை இலக்கிய போட்டிகள் நடை பெறுகின்றன.

    அரங்க போட்டிகள், அரங்கமல்லாத போட்டிகள் என 2 பிரிவுகளாக மொத்தம் 20 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இப்போட்டிகள் குறித்து கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் கூறுகையில், கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைத் திறனுக்குக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு களமாக இப்போட்டிகள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன.

    20 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் கேரள அளவிலான கல்லூரிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாணவ மாணவிகளின் திறமைக்குக் களம் அமைத்து கொடுக்கும் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாபெரும் கலை இலக்கிய போட்டிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்திட வேண்டும் என்றார்.

    இப்போட்டியினைக் கல்லூரி கவின்கலை மன்றம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது

    ×