search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலக்கிய போட்டிகள்"

    • 23-ந் தேதி நடக்கிறது
    • அரங்க போட்டிகள், அரங்கமல்லாத போட்டிகள் என 2 பிரிவுகளாக மொத்தம் 20 போட்டிகள் நடை பெறுகின்றன.

    கருங்கல் :

    கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போ ன்சா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் வரும் 23-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் கேரள அளவிலான கல்லூரிகள் இடையான கலை இலக்கிய போட்டிகள் நடை பெறுகின்றன.

    அரங்க போட்டிகள், அரங்கமல்லாத போட்டிகள் என 2 பிரிவுகளாக மொத்தம் 20 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இப்போட்டிகள் குறித்து கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் கூறுகையில், கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைத் திறனுக்குக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு களமாக இப்போட்டிகள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன.

    20 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் கேரள அளவிலான கல்லூரிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாணவ மாணவிகளின் திறமைக்குக் களம் அமைத்து கொடுக்கும் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாபெரும் கலை இலக்கிய போட்டிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்திட வேண்டும் என்றார்.

    இப்போட்டியினைக் கல்லூரி கவின்கலை மன்றம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது

    • பொருளியல் துறையை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வினாடி-வினா, கட்டுரை, பேச்சுப்போட்டி, குழு நடனம் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை மற்றும் சமூக ரெங்கபுரம் பைன்டெக் நிறுவனம் சார்பில், பொருளியல் மன்ற கலை இலக்கிய விழா நடந்தது. இதில் பொருளியல் துறையை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வினாடி-வினா, கட்டுரை, பேச்சுப்போட்டி, குழு நடனம், கழிவுகளில் இருந்து கலை, அடுப்பில்லா சமையல் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டிகளை பொருளி யல் துறை தலைவர் சி.ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் படி வினாடி-வினாவில் பொருளியல் இளங்களை 3-ம் ஆண்டு மாணவர்கள் செல்வம், ஞான அபினாஷ் முதல் பரிசு பெற்றனர்.

    கட்டுரைப்போட்டியில் எம்.பில். மாணவி சன்மதி முதல் பரிசும், பேச்சுப்போட்டியில் 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் செல்வம் முதல் பரிசை பெற்றார்.

    கழிவுகளில் இருந்து கலை என்ற போட்டியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி வேலம்மாள் என்ற பொன்திவ்யா முதல் பரிசும், பாட்டுப்போட்டியில் எம்.பில். மாணவி சன்மதி முதல் பரிசும், அடுப்பில்லா சமையல் போட்டியில் முதுகலை 2-ம் ஆண்டு பொருளியல் மாணவர்கள் சுந்தர்ராஜ், ஆகாஷ் முதல் இடத்தை பிடித்தனர்.

    பேராசிரியர்கள் முத்துக்குமார், மாலைசூடும் பெருமாள், கணேசன் மற்றும் உமா ஜெயந்தி ஆகி யோர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விழா அமைப்பாளர் உதவி பேராசிரியர் ச.சிவமுருகன் வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் கு.கதிரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உதவி பேராசிரியர் பே.மருதையா பாண்டியன் விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவி பேராசிரியர் வீ.சிவ இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், தமிழ்த்துறை தலைவர் கு.கதிரேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அசோகன், பிரியதர்ஷினி மற்றும் மாணவ செயலர்கள் ஜெப்ரின் ஆகாஷ், முகுந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.உதவி பேராசிரியர் சி.முரு கேஸ்வரி நன்றி கூறினார்.

    ×