search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கராத்தே போட்டியில் புனித அல்போன்சா கல்லூரி மாணவர் சாதனை
    X

    தேசிய கராத்தே போட்டியில் புனித அல்போன்சா கல்லூரி மாணவர் சாதனை

    • 65 கிலோ எடை பிரிவுக்குட்பட்ட குமித்தே போட்டியில் முதலிடம் பெற்றார்.
    • சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை

    மார்த்தாண்டம் :

    நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான 19-வது கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புனித அல்போன்சா கல்லூரி மாணவர் நிஷாந்த் 65 கிலோ எடை பிரிவுக்குட்பட்ட குமித்தே போட்டியில் முதலிடம் பெற்றார்.

    தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் நிஷாந்தையும், இத்தகைய சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும் உடற்பயிற்சி இயக்குனர்கள் ஏ.பி.சீலன் மற்றும் பி.அனிஷா ஆகியோரை கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் மற்றும் பேராசிரி யர்கள் வாழ்த்தினர்

    Next Story
    ×