search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதர்"

    • மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
    • பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் முதல் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசலாறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

    இதனால் மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்–பட்ட அதிகாரிகள் அரசலாற்றை ஆக்கிர–மித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதரில் 2 பச்சை நிற பாலித்தீன் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • 28 பண்டலுக்கு 2 கிலோ வீதம் சுமார் 56 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் உப்பளம் செல்லும் சாலை ஓரத்தில் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா மூட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றினர்.

    அதிராம்பட்டினம் நுண்ணறிவு பிரிவு காவலர் வெற்றிச்செல்வனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கோபால், பாண்டியன், நாராயணசாமி ஆகியோர் அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்பிக்கோட்டை மறவக்காடு கிழக்கு கடற்கரை சாலைக்கு கிழக்கே 200 மீட்டர் தூரத்தில் உப்பளம் செல்லும் சாலையின் இடதுபுறமாக புதரில் 2 பச்சை நிற பாலித்தீன் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனை அடுத்து அந்த கஞ்சா மூட்டை களை கைப்பற்றி அதிராம்ப ட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதில் 28 பண்டலுக்கு 2 கிலோ வீதம் சுமார் 56 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இதுதொடர்பாக நாகப்பட்டிணம் என்.ஐ.பி.சி.ஐ.டி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆலாம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது.
    • தண்ணீர் வெளியேற்றப்படும் ஷட்டர், உபரி நீர் வெளியேறும் பகுதி மற்றும் கரையிலுள்ள மரங்கள், திறந்தவெளி பாராக குடிமகன்களால் பயன்படுத்தப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது.சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள மழை நீர் ஓடைகள் வாயிலாக இக்குளத்துக்கு நீர்வரத்து கிடைத்து வந்தது.பருவமழை பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆண்டில் பல மாதங்கள் தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படும். சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தென்னை சாகுபடியும் பாதிக்கும் சூழ்நிலை இருந்தது.

    இந்நிலையில், திருமூர்த்தி அணை கட்டப்படும் முன்னர், பாலாற்றின் வாயிலாக பூசாரிநாயக்கன்குளத்துக்கு நீர்வரத்து கிடைத்தது. அதன் அடிப்படையில் பி.ஏ.பி., துணை அமைப்பாக குளத்தை சேர்த்து தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.நீண்ட கால போராட்டத்துக்குப்பிறகு கடந்த 2012 முதல் பி.ஏ.பி., கால்வாய் வழியாக குளத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    தற்போது மண்டல பாசன காலத்தில், அரசாணை அடிப்படையில் பூசாரிநாயக்கன்குளத்துக்கு, பி.ஏ.பி., கால்வாயில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதையடுத்து சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இந்நிலையில் தற்போது குளத்தின் கரை, புதர் மண்டி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் தண்ணீர் வெளியேற்றப்படும் ஷட்டர், உபரி நீர் வெளியேறும் பகுதி மற்றும் கரையிலுள்ள மரங்கள், திறந்தவெளி பாராக குடிமகன்களால் பயன்படுத்தப்படுகிறது.

    அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான காலி மதுபாட்டில்கள் கரையிலும், குளத்து நீரிலும் வீசப்பட்டுள்ளது. மேலும் இறைச்சி கழிவுகளையும், மூட்டையாக கட்டி தண்ணீரில் வீசுவதும் அதிகரித்துள்ளது.இதனால் குளத்து நீர் மாசடைவதுடன் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறையினர் இது குறித்து ஆய்வு செய்து, குளத்தின் கரையில் புதர்களை அகற்ற வேண்டும். குளத்து நீர் மாசடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×