search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bunch"

    • புதரில் 2 பச்சை நிற பாலித்தீன் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • 28 பண்டலுக்கு 2 கிலோ வீதம் சுமார் 56 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் உப்பளம் செல்லும் சாலை ஓரத்தில் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா மூட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றினர்.

    அதிராம்பட்டினம் நுண்ணறிவு பிரிவு காவலர் வெற்றிச்செல்வனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கோபால், பாண்டியன், நாராயணசாமி ஆகியோர் அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்பிக்கோட்டை மறவக்காடு கிழக்கு கடற்கரை சாலைக்கு கிழக்கே 200 மீட்டர் தூரத்தில் உப்பளம் செல்லும் சாலையின் இடதுபுறமாக புதரில் 2 பச்சை நிற பாலித்தீன் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனை அடுத்து அந்த கஞ்சா மூட்டை களை கைப்பற்றி அதிராம்ப ட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதில் 28 பண்டலுக்கு 2 கிலோ வீதம் சுமார் 56 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இதுதொடர்பாக நாகப்பட்டிணம் என்.ஐ.பி.சி.ஐ.டி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×