search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல"

    • 7 இடங்களில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது.
    • கடந்த 2 மாதமாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது

    நாகர்கோவில் : திருச்சியை தலைமை யிடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நகைக்கடையின் கவர்ச்சிகரமான அறி விப்பை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் வட்டி தொகை மாதந்தோறும் வழங்கப்பட்ட நிலையில். கடந்த 2 மாதமாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது.

    அதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட முதலீட் டாளர்கள் நாகர்கோவில் மற்றும் பல பகுதிகளில் உள்ள பிரணவ் ஜுவல்லரி கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையில் அந்தக் கடை திடீரென மூடப் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்த னர்.

    அதன்பேரில் பொருளா தார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்ய பிரபு பிரியா உத்தரவின் பேரில் நகை கடையின் 11 கிளைகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோ வில் கிளையில் பொருளா தார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குமரேசன், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா,சப்-இன்ஸ்பெக்டர் கள் மேரி அனிதா, இசக்கித்தாய் மற்றும் போலீ சார் நேற்று மாலை சென்றனர்.அவர்கள் கடை ஊழியர்களை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு, கடையில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர்.

    இன்று 2-வது நாளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்கள் ஆய்வினை தொடர்ந்தனர். கடையில் இருப்பு உள்ள நகைகள், கணக்கு விவரங்கள், முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பள்ளி விளை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை செந்தில். இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது. நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் வெள்ளை செந்தில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளை செந்தில் சென்னையில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு வெள்ளை செந்திலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெள்ளை செந்திலை நேற்று இரவு நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வெள்ளை செந்திலை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • விசாரணையில் தாராபுரம் உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார் என்பதும்,மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
    • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபுராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் ஆகும். இவர் ரூ.1.25 மதிப்பில் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி இருந்தார்.

    இந்த புதிய மோட்டார் சைக்கிளில் தான் பிரபு ராஜா தினமும் ஆஸ்பத்திரிக்கு வருவார். அங்குள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்வார்.

    இதேபோல் சம்பவத்தன்றும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பணிக்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நம்பர் கள்ள சாவி போட்டு மோட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் பிரபுராஜா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் எல்லைமாரியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம், உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார்(23) என்பதும், பிரபு ராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் இவர் மீது திருப்பூரில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 4 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3 வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×