search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடிவாரண்டு"

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
    • குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே சொத்த விளை ஒசரவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்ற தாத்தா செந்தில் (வயது 63). இவர் வடசேரியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து செந்திலுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் செந்திலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரை நாகர்கோவிலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் இன்று காலை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மீது குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. தாத்தா செந்தில், வெள்ளை செந்திலை தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிடிவாரண்டு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் சுற்றி தெரியும் ரவுடிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு போலீசார் அதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றசெயலில் ஈடுபடும் எந்த ரவுடியும் தப்பிக்க முடியாது என்றார்.

    • இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பள்ளி விளை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை செந்தில். இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது. நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் வெள்ளை செந்தில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளை செந்தில் சென்னையில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு வெள்ளை செந்திலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெள்ளை செந்திலை நேற்று இரவு நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வெள்ளை செந்திலை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • அரியலூர் அருகே வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்டுக்கு வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு நீதிபதி உத்தரவு
    • இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் போலிஸ் சரகம் முள்ளுக்குறிச்சி கிராமத்தை சார்ந்தவர் ராஜாராம் இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார், இவர் கடந்த 27.5.2019 அன்று 3மணியளவில் இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து ராஜாராமை வழிமறித்து தாக்கி இருசக்கரவாகனத்தை பிடுங்கிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர், ராஜாராம் கொடுத்த புகார் கொடுத்ததின் பேரில் தளவாய் போலிசார் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் கருங்குழி கிராமத்தை சார்ந்த சக்திவேல்(30), கடலூர் மாவட்டம் சின்னகொசப்பாளையம் கிராமத்தை சார்ந்த அஜய்(23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கு செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது, அனைத்து சாட்சிகளும் விசாரனை முடிவுற்ற நிலையில் விசாரனை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு மார்ச்-23 அன்றைய தேதியிலிருந்து கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வரவில்லை, விசாரனை செய்த செந்துறை குற்றவியல் நிதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகிருபா வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல வராத சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு 24ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

    • விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
    • கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

    மதுரை:

    பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் கடந்த 1992-96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்ட படிப்பு முடித்தேன். இறுதியாக தேர்வு தேர்ச்சி பட்டியலில் எனது பெயர் தேர்வு எண் இல்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க சொன்னார்கள்.

    பின்னர் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாததால் உங்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் எழுதி தேர்ச்சி பெற்றேன்.

    பின்னர் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை மதிப்பெண் பட்டியல் தரவில்லை. ஆகவே எனது பொறியியல் படிப்பிற்கான அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்த மதிப்பெண் சான்று வழங்க உத்தரவிடுமாறு கடந்த 2020 ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது பொறியியல் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்று கோரி கல்லூரி நிர்வாகத்திடமும் பல்கலைக்கழகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    வழக்கு தாக்கல் செய்தும் உள்ளார். எனவே மனுதாரர் கேட்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும் என கடந்த விசாரணையின் போது நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் செயல்படுத்தி பதிவாளரை நீதிமன்றத்தில் ஜூலை 7 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார்.
    • வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார். அப்போது, 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்த மங்கலம் கோர்ட்டில் நடை பெற்று வரும் விசாரணை யில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    இதைத்தொடர்ந்து சேந்த மங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹ ரன், வழக்குகளில் ஆஜராகா மல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில், சேந்தமங்கலம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை (6-ந் தேதி) சேந்த மங்கலம் கோர்ட்டில் ஆஜராக, நீதிபதி பிடிவா ரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • 3 வழக்குகளிலும் அப்போதைய பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார்.
    • ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகே உள்ள ஆண்டவர் நகரை சேர்ந்தவர் முருகேசன் (57). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3.8.2017 அன்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டை மூலவாய்க்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அந்தியூர் அருகே உள்ள பர்கூர் சுண்டப்பூரை சேர்ந்த சிவா (32) என்பவர் ஓட்டிச்சென்ற ஆம்னி வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதேபோன்று கோபிசெ ட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (75). இவர் கடந்த 24.2.2017 அன்று உப்புக்கார பள்ளம் என்ற இடத்தில் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த வாணிப்புத்தூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சதீஸ் என்கிற கருப்புசாமி என்பவர் ஓட்டிச்சென்ற ஆம்னி வேன் ஈஸ்வரமூர்த்தி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈஸ்வரமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நேரு நகரை சேர்ந்தவர் சங்கர் (31). கூலித்தொழிலாளியான சங்கர் கடந்த 29.3.2019 அன்று வீட்டின் முன்பு அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சங்கரிடம் இருந்த செல்போ னை பறித்துக்கொண்டு தப்பியோடினர். அதைத்தொடர்ந்து சங்கர் அளித்த புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நெப்போ லியன் தற்போது சேலம் மாநகரம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்குகள் கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 1-ல் நடைபெற்று வந்தது.

    இந்த 3 வழக்குகளிலும் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யனுக்கு ஜே.எம்.1 மாஜிஸ்தி ரேட் விஜய் அழகிரி சாட்சி விசாரணைக்கு ஆஜராக கூறி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். 3 வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகாத இன்ஸ்பெக்ட ருக்கு வாரண்ட் பிறப்பி க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன்.
    • வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    நாமக்கல்:

    கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது அப்பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை தற்போது சேந்தமங்கலம் கோர்ட்டில் நடந்து வரு கிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பி யும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் மாதை யனுக்கு கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    • இம்ரான்கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
    • எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    எனினும் இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டின் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்று அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா.
    • அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவர் மீது வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனிடையே ஆஞ்சநேயா தேன்கனிகோட்டை கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும் என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    • வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறை வானார்.
    • கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும்

    கிருஷ்ணகிரி,

     கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவர் மீது வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறை வானார்.

    இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனிடையே ஆஞ்சநேயா தேன்கனிகோட்டை கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும் என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    • இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு நீதிபதி விசாரணைக்கு ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
    • மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி உள்ளே பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி அன்று சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்ததாக கடம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு கோபிசெட்டிபாளையம் முதலாம் வகுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அப்போதைய பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் இருந்து வந்தார். இவர் கோர்ட்டில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இதையடுத்து சாட்சி விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு நீதிபதி விஜய் அழகிரி விசாரணைக்கு ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

    மேலும் அவர் வரும் 15-ந்தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

    தற்போது நெப்போலியன் சேலம் பள்ளபட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.

    • பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
    • அரியலூர் மாவட்ட நீதிபதி உத்தரவு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்ததை சார்ந்தவர் பரமசிவம் (வயது 71). இவர் 14.4.2015 அன்று மதியம் வீட்டில் இருந்தபோது இவரது சகோதரர்கள் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகிய 3 பேரும் சென்று வீட்டை காலி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு பரமசிவம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது, தீர்ப்பு வரட்டும், தீர்ப்பு வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் பரமசிவத்தை தாக்கியுள்ளனர். சண்டையை விலக்க வந்த தில்லை வள்ளாலன், ஆதிமூலம் ஆகியோரையும் உருட்டுகட்டை மற்றும் அரிவாளால் தாக்கி காயப்படுத்தி யுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் குவாகம் போலீசார் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரனை அதிகாரியான குவாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலா செயல்பட்டார். ஜெயங்கொண்டம் குற்றவியியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டிலிருந்து மேல் விசாரணைக்காக அரியலூர் மாவட்ட கோர்ட்டிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 11 சாட்சிகளில் 10 சாட்சிகளிடம் விசாரனை முடிவடைந்தது.

    இதற்கிடையே விசாரணை அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் கலா தற்போது பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். மேற்கண்ட வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு தொடர்ந்து அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

    இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை 6.3.2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட நீதிபதி மகாலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

    ×