search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamarajar university"

    • விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
    • கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

    மதுரை:

    பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் கடந்த 1992-96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்ட படிப்பு முடித்தேன். இறுதியாக தேர்வு தேர்ச்சி பட்டியலில் எனது பெயர் தேர்வு எண் இல்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க சொன்னார்கள்.

    பின்னர் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாததால் உங்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் எழுதி தேர்ச்சி பெற்றேன்.

    பின்னர் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை மதிப்பெண் பட்டியல் தரவில்லை. ஆகவே எனது பொறியியல் படிப்பிற்கான அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்த மதிப்பெண் சான்று வழங்க உத்தரவிடுமாறு கடந்த 2020 ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது பொறியியல் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்று கோரி கல்லூரி நிர்வாகத்திடமும் பல்கலைக்கழகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    வழக்கு தாக்கல் செய்தும் உள்ளார். எனவே மனுதாரர் கேட்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும் என கடந்த விசாரணையின் போது நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் செயல்படுத்தி பதிவாளரை நீதிமன்றத்தில் ஜூலை 7 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பிய விடைத்தாள்கள்.
    • பல்கலைக்கழக வளாக அறையில் இருந்த விடைத்தாள்கள் ஜன்னல் வழியாக திருட்டு.

    காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைநிலைக் கல்வி படிப்புக்கான ஆன்லைன் தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. மாதத்தில் மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பியுள்ளனர்.

    இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விரகனூரில் பழைய பேப்பர் குடோனில் விடைத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

    மதுரையில் பழைய பேப்பர் கடையில் இருந்து பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையில் பல்கலைக்கழக வளாக அறையில் இருந்த விடைத்தாள்கள் ஜன்னல் வழியாக ஆடு மேய்க்கும் சிறுவர்கள் திருடப்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    காணாமல்போன விடைத்தாள்கள் மீட்கப்பட்ட நிலையில், அதுபற்றி விரிவாக விசாரிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×