என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாலியல் தொந்தரவு"
- கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார்.
- ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் மாணவிக்கும், ஆழியாறு பூங்காவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த உட்டாம் பாவூரி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர் கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார். மேலும் அவர் பஸ்சில் செல்லும் போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் தந்தை ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
ஆழியாறு போலீசார் சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆழியாறு போலீசில் ஒப்படைத்தனர்.
10-ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த உட்டாம் பாவூரி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.
பேரையூர்:
திருமங்கலம் துப்புரவு தொழிலாளர் காலனியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்து வந்தாள். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது 5 வயது தங்கையுடன் காந்திஜி தெருவில் உள்ள ஆசிரியையை பார்க்க சென்றாள்.
அப்போது அங்கு ஆசிரியை இல்லை. கீழ் வீட்டில் இருந்த அய்யப்பன் மகன் பாலவிக்னேஷ் (வயது 24) என்பவர் 2 சிறுமிகளிடமும் மிட்டாய் தருவதாக கூறி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு 2 நிறுமி களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பாலவிக்னேசை கைது செய்தனர். இவர் நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்